Friday, November 12, 2010

முதல்வர்

கல்விக்கலைமகளின் உறைவிடமாய் விளங்கும்

கலைமகளின் பள்ளியிலே

பசுமை கொண்ட நெஞ்சினாய்

பூத்துக்குலுங்கும் புன்முறுவலாய்

முழுமதி ஒளியாய்

ஒய்யார நடையுடன் நகை தழுவ

தரமறிந்து பழகும் பிராட்டியாக

பிள்ளைகளின் செல்லச் செல்வியாக

பவனி வந்தும் , பணியாற்றியும் , பயிற்றுவித்தும்

வியர்வைக்கே விலை என்ன ?

எனக் கேட்கும் அளவிற்கு............

விடியலாய் , விண்ணரசியாய்

வியத்தகு அரும் பெரும் பணிகளைச் செய்து

செயலரை வியப்பில் ஆழ்த்திய அலைமகளே

உமது பணி துணைதான் என்றிராமல்

"எனது கடன் பணி செய்து கிடப்பதே"

என்ற கொள்கையை உம் வாழ்வில் மேற்கொண்டவரே............

அதனால்,

உமக்கு உமையவளின் துணை கிடைத்ததா???

இல்லை...

முதல்வனின் துணைதான் கிடைத்ததோ??????????

நீர் முதல்வராக!!!

என்னே பெரும் வியப்பு!!!!!!!!!!!!!!

வியப்பில் ஆழ்த்திய அம்மையே!

உமது பணி மேலோங்கி நிற்க

நிற்போம் நாங்களும் உமக்குத்

துணையாக...........................
----------------------------------------------------------------------------------------------------------------------------------


தமிழ்த் துறை 

No comments:

Post a Comment