Thursday, September 21, 2017

ஆசிரியர் தினம் (2017)



ஆசிரியர் தினம் – (2017)

புத்தம் புது விடியலாய்
பொங்கி வரும் அருவியாய்
என்றும் என்றென்றும்
மாணவர்களின் மனதில்
நீங்காது கொலுவிருக்கும்
குறிஞ்சி மலர்களே!
என் மனதில் நிறைந்த
சிம்ம சொப்பனங்களே!!
நீரே எம் வாழ்வின்
முதல் வசந்தமே!!!
வாழ்க்கையின் முதல் அடித்தளமே!!
உம்மைக் கண்ட இக்கண்கள்
மறுவார்த்தைப் பேச மறுக்கிறது
மாயை உலகைக் கணிக்க வைக்கிறது
கற்பிப்பது மட்டும் உன் கனவல்ல
கற்றவர் வாழ கரை சேர்க்க
கலைமகளாய் உறைபவளும் நீ
விடியலை உணர்த்தும் பூபாள ராகம் நீ
வெம்மையைக் களையும்
இளந்தென்றலும் நீ
வகுப்பறை வாசலின் வாழ்வியலும் நீ
வானோரும் போற்றும்
வையை நாடனும் நீ
உம்மை நினைத்தல்
பொங்குகிறது பொங்கு தமிழ்
பொறுப்பை உணர்ந்து செயலாற்றும் உன் அரிய பணி
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
வானில் சஞ்சரித்தாலும்
அழகிய விண்மீனாய்
அரங்கேறும் அண்ணலே..
உம்மை உன் பணியை
உள்ளம் உணர்கிறது
உரிமையோடு உறவை ஏற்படுத்துகிறது
உன்னையன்றி பிற துறை இல்லை
உன்னாலன்றோ நான் நானாக உள்ளேன்
காவியமாகலாம் ஓவியமாகலாம்
நீர் ஒருவரே கடவுளாகலாம்!!!!


No comments:

Post a Comment