ஆசிரியர் தினம் (2017)



ஆசிரியர் தினம் – (2017)

புத்தம் புது விடியலாய்
பொங்கி வரும் அருவியாய்
என்றும் என்றென்றும்
மாணவர்களின் மனதில்
நீங்காது கொலுவிருக்கும்
குறிஞ்சி மலர்களே!
என் மனதில் நிறைந்த
சிம்ம சொப்பனங்களே!!
நீரே எம் வாழ்வின்
முதல் வசந்தமே!!!
வாழ்க்கையின் முதல் அடித்தளமே!!
உம்மைக் கண்ட இக்கண்கள்
மறுவார்த்தைப் பேச மறுக்கிறது
மாயை உலகைக் கணிக்க வைக்கிறது
கற்பிப்பது மட்டும் உன் கனவல்ல
கற்றவர் வாழ கரை சேர்க்க
கலைமகளாய் உறைபவளும் நீ
விடியலை உணர்த்தும் பூபாள ராகம் நீ
வெம்மையைக் களையும்
இளந்தென்றலும் நீ
வகுப்பறை வாசலின் வாழ்வியலும் நீ
வானோரும் போற்றும்
வையை நாடனும் நீ
உம்மை நினைத்தல்
பொங்குகிறது பொங்கு தமிழ்
பொறுப்பை உணர்ந்து செயலாற்றும் உன் அரிய பணி
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
வானில் சஞ்சரித்தாலும்
அழகிய விண்மீனாய்
அரங்கேறும் அண்ணலே..
உம்மை உன் பணியை
உள்ளம் உணர்கிறது
உரிமையோடு உறவை ஏற்படுத்துகிறது
உன்னையன்றி பிற துறை இல்லை
உன்னாலன்றோ நான் நானாக உள்ளேன்
காவியமாகலாம் ஓவியமாகலாம்
நீர் ஒருவரே கடவுளாகலாம்!!!!


தமிழ்த் தாய்(2017




தாய்க்குத் தாலாட்டுப் பாடுவது
ஒரு சிலரின் தனிச் சிறப்பு….
தாய்த் தமிழுக்குத் தொண்டு செய்வது
பண்டிதர்களின் பழஞ்சிறப்பு
தாய்நாட்டிற்கு வாழ்த்துப் பாடுவது
விஞ்சியோரின் பெருஞ்சிறப்பு. – இதைவிட
என் தமிழ்த் தாய்க்கு நான் எழுதும்
இக்கவிதையே என் சிறப்பு!
தமிழே! தாயே!
கருவறையில் எமை பள்ளி கொள்ளச் செய்ததும் நீயே!
கார்மேகமாய் கவிதை மழை அளிப்பவளும் நீயே!
குமரிக் கண்டத்தின் முதல் தோற்றமும் நீயே!
கூடலழகரின் முதன்மைத் தாயும் நீயே!
முத்துக் குளித்த தென்மதுரையில்
வளர்ந்தவளும் நீயே!
மூதாதையரின் வழித் தோன்றலுக்குத்
தாயானவளும் நீயே!
 நக்கீரனின் நாவினில் உழன்றவளும் நீயே!
பிறப்பு முதல் இறப்பு வரை
பரிணாம வளர்ச்சியாய்
 பவனி வந்தவளும் நீயே!
பல நாடுகள் கடந்து பயணிப்பவளும் நீயே! நீயே!!
தாயே!!! என் தமிழ்த்தாயே!!! – என்னை
காதல் மொழி பாட வைத்தவளும் நீயே!
காதலுக்குத் தூது சென்றவளும் நீயே!
கவிதை எழுத வைத்தவளும் நீயே!
என் காதலன் நாவினில் தமிழ்த்தாய்
என நவின்றவளும் நீயே!
உம்மேல் பித்தன்போல்
அலைய வைத்தவளும் நீயே!
பிதாமகனை எனக்கு
அறிமுகம் செய்தவளும் நீயே!!
உடல், பொருள் ஆவியாய்
உழல்பவளும் நீயே!
உணர்வாய், உறவாய் என்னுள்
உறைந்திருப்பவளும்   நீயே!
உனக்கு அரியாசனம் அமைக்க எம்மை
இணைத்தவளும் நீயே!
ஊழ்வினைப் பாராது உதவ
எங்களுக்கு உந்துதலாய்
 இருப்பவளும் நீயே!
உண்மையின் உருவத்தை
அடையாளம் காட்டியவளும் நீயே!
தரணியில் நான் வாழ
தலைவனை எனக்குத் தந்தவளும் நீயே!
என் உயிரே!! உடலே!!!
நீயே!!!  நீயே!! – என்றும் என்றென்றும்
என் தாகத்தைத் தணிக்கும் தமிழ்த்தாயே!!!!

                               சித்ரா K ஆகாஷ்.










அச்சு குட்டி (2017) பிறந்த நாள் பாடல்


பாடியது: யுக பிரியா ... என் அருமை மாணவி(ஒன்பதாம் வகுப்பு)
இசை: என் அன்பு மாணவன் சந்தோஷ் (ஒன்பதாம் வகுப்பு)
எழுதியது : என் கை வண்ணம்



அச்சு குட்டி பிறந்த நாள்(2017)

பாடியது எனது அருமை மாணவி யுக பிரியா(ஒன்பதாம் வகுப்பு)
இசை: என் அன்பு மாணவன் சந்தோஷ்(ஒன்பதாம் வகுப்பு)