Search This Blog

Showing posts with label 10th Study Materials (2013-14). Show all posts
Showing posts with label 10th Study Materials (2013-14). Show all posts

Tuesday, August 25, 2015

திரைப்படக் கலை




திரைப்படக்கலை உருவான கதை -
திரைப்படத்தின் சிறப்பு:
உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும்மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம்.
அது உதடுகளால் பேசும் மொழியன்றுஉள்ளத்தால் பேசி,உணர்ச்சிகளால் உருவாகும் மொழி.


திரைப்படத்தின் வரலாறு:
ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர்எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை





ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
எடிசன்ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாகஇவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.





திரைப்படம்:
நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும்காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குனர் என்பர்.
கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள்,செய்திப்படங்கள்விளக்கப்படங்கள்கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது.
திரைப்படச்சுருள்:
திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருள்எதிர்ச்சுருள் எனப்படும்.






படம்பிடிக்கும் கருவி:

இது ஒளிப்பதிவு செய்யப் பயன்படுகிறது.
படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருள் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.
ஒலிப்பதிவு:
நடிகர்களின் நடிப்பையும்பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர்.






திரைப்படக்காட்சிப் பதிவு:

ஒளிஒலிப்படக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்பயன்படுகிறது.
இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும்அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இரு பெட்டிகள் இருக்கும்.




கருத்துப்படம்:
கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் “வால்ட் டிஸ்னிஎன்பார் ஆவார்.
படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் படங்களைத் தயாரிக்கின்றனர்.





Tuesday, August 26, 2014

10ஆம் வகுப்பு CBSE மாணவச்செல்வங்களுக்கான உரை நூல் (எனது முதல் முயற்சி)


 தமிழ் அன்னைக்கு வணக்கம்!!
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
 எண்ணுவம் என்பது இழுக்கு.
ஆம்! நான் எடுத்த இச்செயலை நினைத்த மாட்டில் முடித்து விட வேண்டும் என்ற திண்ணமும், ஆர்வமும் எனக்குள் துளிர் விடக் காரணம் மாணவச்செல்வங்கள் மேல் நான் கொண்டிருக்கும் அபரிதமான அன்பும் அக்கரையுமே. எத்தனையோ உரை நூல் மாணவ மணிகளை நோக்கி வலம் வந்தாலும் எமது CBSE மாணவச்செல்வங்களுக்கான உரை நூல் தேர்வின் அடிப்படையில் இல்லாதது எனக்குள் ஒரு பெருங்குறையாகவே இருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு எழுந்ததே இந்நூல். இது மாணவர்களின் அறிவுப்பசிக்கு விருந்தாக்கும் என்று நம்புகிறேன்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
என்பதற்கேற்ப முயன்றுள்ளேன். இம்முயற்சியை மாணவக்கண்மணிகளாகிய நீங்கள் முயன்று வெற்றியடைவது உங்கள் கையில்தான் உள்ளது.முழுமையான அலசல்களின்படி தேர்வை நோக்கியே இந்நூலை அமைத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக!.

                   
இந்நூல் உருவாவதற்கு முதல் காரணகர்த்தியாக இருந்தவர் மதிப்பிற்குரிய பத்மா பப்ளிகேஷன் திரு. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது முதல் நன்றி. அடுத்து, இவ்வாய்ப்பினை நல்கிய எம் பள்ளி முதல்வருக்கு நன்றி. மேலும் எனது பெற்றோரின் ஆசிர்வாதம், கணவரின் கனிவு, தம்பிமார்களின் தயவு, சகோதரிகளின் அரவணைப்பு, எனதருமைக் குழந்தைகளின் குதூகலப் புன்முறுவல், நட்பின் நேசம் இதனை மேலும் செய்யத்தூண்டியது. இது எனது முதல் முயற்சி. இதில் ஏதேனும் குறையிருப்பின் சுட்டிக் காட்ட முயலுங்கள். முயல்கிறேன் மீண்டும் எனது முதல்வனை வேண்டி குறைகளை நிறைவு செய்ய…………….

உங்கள் பேராதரவை எதிர்நோக்கும்………

       

Thursday, August 22, 2013

SA1 Model Question Papers - 10th



To download the PDF files, 
click on the below link and go to "File--> Save"

         SA1 - Model 1

         SA1 - Model 2

         SA1 - Model 3

         SA1 - Model 4

Translate