Search This Blog

Monday, August 31, 2015

பிறந்த நாள் வாழ்த்து மடல்...அகிலன் & ஆகாஷ் செல்வன்



பிறந்த நாள் வாழ்த்து மடல்.- 31-08-2015
வாழ்வின் முதல் வசந்தம் – அது
வருடத்திற்கொருமுறை தரும் சந்தம்.
வாழ்கவென வாழ்த்து கூறும் பந்தம்
வழிமொழிய நான்  நுழைந்த சொந்தம்.
எப்படிப் பிறந்தோம் என்பது வாழ்க்கையல்ல…
எக்காலத்திற்கும் எப்படி வாழ்வோமென்பதே வாழ்க்கை.
ஏய்த்துப் பிழைப்பது உனது சுதந்திரமல்ல.
ஏணிப் படியாக்கி பிறரை அழகு பார்ப்பதே உன் தந்திரம்
நம்பிக்கைக் கொண்டு நல்லுலகைக் கட
நாணயமானவர்களோடு கைகோத்து நட
நாளை நமதாகுமென்ற நல்லினத்துடன் எழு
நாற்றிசையும் ஓங்குமே உனது பழு
கடினமென்று காதில் விழுவதை அப்புறப்படுத்து.
காட்டாறு வெள்ளம்போல் அதனைச் சுத்தப்படுத்து.
காளை இவன் கலையின் மகனென பெருமைப்படுத்து.
கலாவின் கனவு நாயகன் காதலனென முன்னிறுத்து.
சலசலப்புக்கு அஞ்சாத சாமான்யனாக இரு.
சரித்திரத்தில் சரம் தொடுக்க சஞ்சரித்த கரு.
சாதித்தவர்களின் சரித்திரத்தை அலசிப் பயில்.
சர்வ கடாட்சம் கிடைக்குமே கந்தனின் மயில்.
ஆராய்ந்து பார்த்து அன்பு கொள்ளாதே.
ஆழ்மனதில் நிறைந்த பண்பை தள்ளாதே.
அன்பு நிறைந்த அன்பர்களைக் கொள்.
அதிகம் வைக்காதே உன் அகத்தில் கொள்.
இன்னல் தருபவர்களை இழிவாகப் பேசாதே.
இன்னமும் இருக்கிறது இனிய வாழ்வு மறவாதே.
இரக்கமில்லாதவர்களென எதிரியை ஏசாதே.
இறங்கி ஒருநாள் வருவார்களென கனியாதே.
புத்திமதி கூறுமளவிற்கு நீ புல்லருவியல்ல.
புகழுடம்பை பொய்க்கிரையாக்கும் பேதையுமல்ல.
புத்திரனாய் புகழ் மணக்கப் பிறந்தவனே.
புன்னகை கொண்டு ஆள்வாயே இத்தினமே.
தளிர் நடையிட்ட தாளங்களைக் கண்ட கண்கள்
தளதளக்கும் தவப்புதல்வனைக் காண்கிறது என் பண்கள்.
தரணியில் தார்மீகப் பொறுப்பேற்க ஏங்குகிறது மனம்.
தாயாய் நின்று தாலாட்டுகிறது இக்கணம்.
வாழ்க என்றென்றும் நீ வாழ்கவென்று.
வருந்தியோரை வருந்தாமல் காக்கவென்று.
வணங்குகிறேன் வடிவேலனை இத்திருநாளென்று
வணங்கா முடியாய் வாழ்க பல்லாண்டுயென்று..


Tuesday, August 25, 2015

Life Skill Competition QCF Tamil

ஆண்டு விழா - CVV

திரைப்படக் கலை




திரைப்படக்கலை உருவான கதை -
திரைப்படத்தின் சிறப்பு:
உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும்மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம்.
அது உதடுகளால் பேசும் மொழியன்றுஉள்ளத்தால் பேசி,உணர்ச்சிகளால் உருவாகும் மொழி.


திரைப்படத்தின் வரலாறு:
ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர்எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை





ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
எடிசன்ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாகஇவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.





திரைப்படம்:
நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும்காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குனர் என்பர்.
கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள்,செய்திப்படங்கள்விளக்கப்படங்கள்கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது.
திரைப்படச்சுருள்:
திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருள்எதிர்ச்சுருள் எனப்படும்.






படம்பிடிக்கும் கருவி:

இது ஒளிப்பதிவு செய்யப் பயன்படுகிறது.
படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருள் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.
ஒலிப்பதிவு:
நடிகர்களின் நடிப்பையும்பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர்.






திரைப்படக்காட்சிப் பதிவு:

ஒளிஒலிப்படக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்பயன்படுகிறது.
இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும்அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இரு பெட்டிகள் இருக்கும்.




கருத்துப்படம்:
கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் “வால்ட் டிஸ்னிஎன்பார் ஆவார்.
படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் படங்களைத் தயாரிக்கின்றனர்.





எனது அருண்




வாழ்த்து மடல் – எனது அருண்
யார் யாருக்கோ எழுத முனைந்த எனது எழுதுகோல்
இன்று உனக்கு எழுத முரண்டு பிடிக்கிறது. …….
ஏனென்று எழுதுகோலிடமேக் கேட்டேன்…
என் எண்ணத்தைக் குவித்து
குறுகுறு விழியில் திருதிருவென..
திருமகள் தவமிருப்பதைப்போல்………..
அப்பொழுது எழுதுகோல், மகளே!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
நினைக்கிறாயே…
..அதனால்தான் நான் நிற்கதியாய் நிற்கிறேன் என்று ….
அப்படிப்பட்டவள் யானோ? என வினவ,
ஆம் மகளே,
       அன்னமானது நீரை நீக்கிப் பாலைப் பருகுவதுபோல
       ஆகாய கங்கையோ தனக்கு மிஞ்சிய தானமளிப்பதுபோல
       இறைவனின் திருவடி நிழலில் உலவும் அடியார்கள்போல
       ஈன்றவளுக்கு தரம் பிரித்துப் பார்க்கத் தெரியாத தங்கம் போல
       உலக இரட்சகனின் உயர்வு நெறியைப்போல
       ஊமத்தம் பூவின் நிறத்தை ஒத்த மனம் போல
       எள்ளளவும் அன்பு குறையாத தாய்மையின்  தூளிபோல
       ஏழேழு பிறவிகளிலும் உடனிருக்கத் துடிக்கும் குகனைப்போல
      ஐராவதச் சிற்பம் போன்று உனது அகம் நிழலாட
      ஒன்றிற்கு ஒன்று விட்டுக்கொடுக்கும் கண்விழிபோல
      ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உனது அன்பை
      ஔவியம் பேசி மறைக்கின்றாயே –
     ஏன் இந்த புற விளையாட்டு….
அகத்தில் அலர்ந்தவனை ஏன் அகற்ற நினைக்கிறாய்….
மனம் ஏன் தவிக்கிறது… மன்றலாடுகிறது…
மண நாளை மன மகிழ்வுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கும் மகனை
மனதளவிலே வைத்து மக்கடிக்காதே, மலரச் செய்….
மணநாளுக்கு மங்களம் கூறு…
அவனது வாழ்வு இனியாவது மகிழ்வோடு மலர வாழ்த்துக் கூறு..
வயதொன்றும் தடையில்லையே, தயை கூற..தலைவனைப் போற்ற-ஆதலால்
தண்டமிழ் சொல்லெடுத்து தலை நிமிர்ந்து எனது அருண் என்று எழுதுகோலைப் பிடி
,பிம்பம் போல் உன் பின்னால் அவனது நினைவலைகள்
ஓடி வரும்……
ஆம்! இது எத்தகு உண்மை….அத்தனையும் தக்க வைத்திருக்கும் தாரக மங்கையல்லவோ யான்……
யான் என்ற விழித்தலுடன் எனது அருணின் நினைவலைகளை ஓடவிட்டேன்… இதோ,
இன்றளவுமின்றி என்றளவும் என் எம்பியென
உரைக்கக் கூறும் என் அருணுக்கு
வைரக்கல் கொண்டு வரிகள் தீட்டவா !
வண்ணப்பொடிகள் கொண்டு வார்த்தை ஓவியம் வரையவா!
வில்லெடுத்து சொல் தொடுக்கவா!
விசாலப் பார்வையினால் பிம்பம் பிரதிபலிக்கவா!
எதனைக் கொண்டு நான் கவிதை தீட்டினாலும்
என் கவிதை உன் அன்புக்கு முன் அடிமை……………
என்னைப் புரிந்தவன், புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றவன்
புவியினில் புத்தம் புது மலராய் தினம் மலர்பவன்
பொய்யுரை இல்லா புகழ்மான்
போலியான அகம் கொண்டு அலையான்
அடுத்தவரின் அகத்தை அலசுபவன் – ஆனால்
ஆராய்ச்சியின்றி அன்பைப் பொழிபவன்
அறிமுகமில்லா அழகன் நீ – எனக்கு
ஆனந்தத்தை மட்டுமே அருளியவன்
வாய்ஜாலத்தால் என்னை வருத்தியவர்கள் முன்
வணங்கா முடியாய் திளைக்க வைத்தவன் நீ
என்னை விட்டுச் சென்ற அன்பை இணைக்க
அயராது ஆழ்ந்து சிந்தித்தவன் நீ
அக்காதல் மன்னனுக்கு இன்று மணநாள்
மனதிற்கினிய மங்கையை மணக்கும் மணநாள்
மனமொன்றி வாழ்த்து கூற விழைகிறேன்
மத்தாப்புச் சிரிப்போடு மனையாட்டியோடு வாழ வழிபடுகிறேன்.
வாழ்த்து ஒன்றே வாழ்வின் நிரந்தரம், நிதர்சனம் என்பதால்
வழிமொழிகிறேன் வாழ்வாங்கு வாழ … வாழ்ந்தோர் வகைமொழிக்கிணங்க
வாழ்க பல்லாண்டு ! தமிழ் இருக்கும் வரை தமிழ் மகன் நீ வாழ்க!
இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை – என்பதற்கிணங்க
உடல் வேறு என்ற சிந்தனையை விடுத்து உயிர் ஒன்றென
உணர்வால் உணர்ந்து உருவாய் அருவாய்
வாழ்வில் ஆறுமுகனின் ஆயுட்காலத்தைப் பெற்று
ஆண்டாண்டு பேரும் புகழும் பெற்று
பெரு வாழ்வு வாழ வாழ்த்தும் உனது இரத்த பந்தம் இல்லா அக்கா…….
-     கலா கலைச்செல்வன்





     

Translate