Search This Blog

Thursday, October 27, 2022

பிள்ளைத்தமிழ் பருவங்கள்

 https://youtu.be/-mOutSPvzCA

Monday, July 18, 2022

வினைத்தொகை - சான்றுகள்

 சுடுகின்ற சோறு  _  நிகழ்காலம்

           சுட்ட சோறு    _    இறந்தகாலம்
            சுடும்சோறு   _   எதிர்காலம்
            
          எரிதழல்
          வீசுதென்றல்
          கடிநாய்
          சுடுசோறு
          குடிநீர்
          ஏவுகணை
          ஓடுதளம்
          ஆடுகளம்
          படர்கொடி
          மூடுபனி
          பாய்புலி
          திருவளர் செல்வன்
          திருவளர் செல்வி

             " காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை "

தமிழ் அமுது - மூன்றாம் வகுப்பு


 

ART INTEGRATION

 


கால்டுவெல்


 

தித்திக்கும் திருக்குறள்


 

நடுவு நிலைமை/அடக்கமுடைமை


 

காமராசர்:


 

காமராசர்: 15.07.2022

 


ஒன்பதாம் வகுப்பு: இலக்கணம் அறிவோம்!!

 தன் வினை வாக்கியம்:


1. தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது.(அல்லது)

ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.

(எ.கா)

கரையைச் சேர்வான்

என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் செய்வான் என்பது பொருள்.


எ.கா

செல்வி பாடம் கற்றாள்.

முருகன் திருந்தினான்.


2. பிறவினை வாக்கியம்


பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.(அல்லது)

ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.

இதனை எளிதாகப் புரிந்து கொள்ள அல்லது எழுத...

 

பித்து' 'வித்து' எனும் சொற்கள் சேர்ந்து வரும்.


(எ.கா)

கரையில் சேர்ந்தான் என்பது தன்வினை


கரையில் சேர்ப்பான்(அல்லது) சேர்ப்பிப்பான் - இது பிறவினை

அதாவது, வேறு யாரையோ அல்லது எதையோ சேரும்படி இவன் செய்வான் என்பது பொருளாகும்,

எ.கா.

ஆசிரியை பாடம் கற்பித்தார்

அவன் திருத்தினான்


கூடுதல் எடுத்துக்காட்டுகள்: 


தன்வினை.      -         பிறவினை

திருந்தினான்-           திருத்தினான்

உருண்டான்-               உருட்டினான்

பயின்றான்-                 பயிற்றுவித்தான்

பெருகு-                          பெருக்குவித்தான்

செய்-                              செய்விவித்தான்

வாடு-                              வாட்டுவித்தான்

நடந்தான்-                     நடத்தினான்

சேர்கிறேன்-                  சேர்க்கிறேன்

ஆடினாள்-                    ஆட்டுவித்தாள்

பாடினான்-                   பாடுவித்தான்

கற்றார்-                         கற்பித்தார்

தேடினான்-                   தேடுவித்தான்

உண்டாள்-                    உண்பித்தாள்

அடங்குவது-               அடக்குவித்தான்

வருந்துவான்-             வருத்துவான்

அடங்கினான் -           அடக்கினான்

ஆடினான் -                   ஆட்டினான்

மாறுவான் -                  மாற்றுவான்


இதில், பித்து, வித்து என்பதை......


நட - நடப்பி - நடப்பித்தான்


செய் - செய்வி - செய்வித்தான்


என்பனபோல வரும். சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.


செய்வினை வாக்கியம்


ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.


(எ.கா) புத்தகம் படிக்கிறேன்


கொசு கடித்தது


நாயை அடிக்கிறான்


பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்.


தச்சன் நாற்காலியைச் செய்தான்


அவள் மாலையைத் தொடுத்தாள்


ராதா பொம்மையைச் செய்தாள்


இத்தொடர்களில் உள்ள வினைச் சொற்கள் செய்வினைச் சொற்களாகும்.


4. செயப்பாட்டு வினை வாக்கியம்


செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும்,

 பயனிலையோடு‘பட்டது’ ‘பெற்றது’ 

என்ற சொற்கள் சேர்ந்து வரும்.



(எ.கா) கல்லணை(செயப்படுபொருள்) கரிகாலனால்(எழுவாய்) கட்டப்பட்டது(பயனிலை)



தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..


புத்தகம் (என்னால்) படிக்கப்படுகிறது.


நான் (கொசுவால்) கடிக்கப்பட்டேன்.


நாய் (அவனால்) அடிக்கப்படுகிறது.


இத் தொடர்களில் செயப்பாட்டு வினைகள் உள்ளன. 

செய்வினையில் படிக்கிறேன் என்றிருந்த சொல், 

செயப்பாட்டு வினையில் படிக்கப்படுகிறது என மாறுகிறது. 


படு என்னும் துணைவினைச் சொல் இவை அனைத்திலும் சேர்ந்து வருகிறது.




இலக்கணம் அறிவோம்!!

இன்சொல் – பண்புத்தொகை இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு 2. எழுகதிர் – வினைத்தொகை கடலின் நடுவே தோன்றும் எழுகதிரின் அழகே அழகு 3. கீரிபாம்பு – உம்மைத்தொகை பகைவர்கள் எப்போதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள் 4. பூங்குழல் வந்தாள் – அன்மொழித் தொகை பூப் போன்ற கூந்தலையுடைய பெண் மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை பழங்குடியினர் மலையின் கண் வாழ்பவர் 6. முத்துப் பல் – உவமைத் தொகை வெண்மதியின் முத்துப் பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது அன்புச்செல்வன் திறன்பேசியின் தாெடுதிரையில் படித்துக் காெண்டிருந்தார். அன்புச்செல்வன் – இருபெயரொட்டு பண்புத்தொகை தாெடுதிரை – வினைத்தொகை 2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் காெடுக்கவும். மோர்ப்பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை மோர் காெடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை 3. வெண்டக்காய்ப் பாெரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும். வெண்டக்காய்ப் – இருபெயரொட்டு பண்புத்தொகை மோர்க்குழம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை 4. தங்கமீன்கள் தண்ணீர்த் தாெட்டியில் விளையாடுகின்றன. தங்கமீன்கள் – உவமைத்தொகை தண்ணீர்த் தாெட்டி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை தொடர்(சொற்றொடர்) சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும். எ.கா.:- நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான். 2. தொகைநிலைத் தொடர்: பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர். எ.கா.:- கரும்பு தின்றான். 3. தொகைநிலைத் தொடர் : தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை வேற்றுமைத்தொகை வினைத்தொகை, பண்புத்தொகை உவமைத்தொகை , உம்மைத்தொகை அன்மொழித்தொகை என்பன ஆகும். 4. வேற்றுமைத்தொகை: ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவ ற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும். 5. பண்புத்தொகை: நிறம், வடிவம், சுவை , அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும். 6. இருபெயரொட்டுப் பண்புத்தொகை: சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ’ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும். 7. உவமைத்தொகை: உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும். எ.கா.:- மலர்க்கை (மலர் போன்ற கை) உருவகம்:உவமானம் வேறு உவமேயம் வேறு என்றில்லாமல் இரண்டும் ஒன்றே என்று ஒற்றுமைப்படுத்த வருவது உருவகம். இதில், உவமேயம் முதலிலும் உவமை இரண்டாவதாகவும் வரும். எ.கா.கை மலர் 8. உம்மைத்தொகை: இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ’உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும். இது, எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும். 9. அன்மொழித்தொகை : வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும். உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை ஒரு தொடரில் வேற்றுமை உருபும், அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது ‘உருபும் பயனும் உடன்தொக்க தொகையும்’ என்பர். 1.தேர்ப்பாகன்- தேரை ஓட்டும் பாகன் 2.நீர்க்குடம்- நீரை உடைய குடம் இவை இரண்டும், இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. 3. பொன்வளையல் 4. மட்பானை பொன்னால் ஆன வளையல் மண்ணால் ஆன பானை இவை இரண்டும், மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. 5. தலைவலி மருந்து 6. கூலி வேலை தலைவலிக்குத் தரும் மருந்து கூலிக்குத் தரும் வேலை இவை இரண்டும், நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. 7. குழாய்த் தண்ணீர்   8. தொட்டித் தண்ணீர் குழாயிலிருந்து கிடைக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து கிடைக்கும் தண்ணீர் இவை இரண்டும், ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை காட்டுப் புலி வீட்டுப் பூனை காட்டின் கண் வாழும் புலி வீட்டின் கண் வாழும் பூனை இவை இரண்டும், ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை வினைத்தொகை: காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்சவிகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் ‘வினைத்தொகை’ எனப்படும். (அல்லது) காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும். (அல்லது) வினைப்பகுதியும் அடுத்த பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலே வினைத்தொகை அமையும் பண்புத்தொகை (எ.கா)  செங்கல் – செம்மையாகிய கல் கருங்குவளை – கருமையான குவளை இவை இரண்டும் நிறத்தைக் குறித்து வந்த பண்புத்தொகை (எகா) -2 வட்டப்பாறை – வட்டமான பாறை வட்டத்தட்டு - வட்டமான தட்டு (எ.கா)  முத்தமிழ் – மூன்று + தமிழ் – மும்மையாகிய தமிழ் முச்சங்கம்,முக்கனி இவை இரண்டும் அளவைக் குறித்து வந்த பண்புத்தொகை.

Monday, January 24, 2022

வினா - விடை வகை - பொருள்கோள்

இரண்டாம் பருவத் தேர்வு – 2021 – 2022 பத்தாம் வகுப்பு – CBSE மாணவர்களுக்கான புதிய வினாத்தாள் அமைப்பு முறையில் முதல் பகுதி – இலக்கணம் – DESCRIPTIVE PATTERN இயல் – 5 – வினா வகை இலக்கண வினாக்கள் – 2 மதிப்பெண்கள் – பயிற்சி – 1 (21.01.2022) __________________________________________________________________________________ 1. வினா எத்தனை வகைப்படும் அவை யாவை? • வினா ஆறு வகைப்படும் . அவை • அறி வினா • அறியா வினா • ஐய வினா • கொளல் வினா • கொடை வினா • ஏவல் வினா 2. அறிவினா என்றால் என்ன? எ.கா. தருக. • தான் அறிந்த ஒன்று பிறருக்கும் தெரியுமா என்பதை அறிவதற்காகக் வினவுவது. (கேட்பது) எ-கா: திருக்குறளை எழுதியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் கேட்பது. 3. அறியா வினா என்றால் என்ன? எ.கா. தருக. • தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது. எ-கா: திருக்குறளை எழுதியவர் யார்? என மாணவன் ஆசிரியரிடம் கேட்பது. 4. ஐயவினா என்றால் என்ன? எ.கா. தருக. • ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது. எ-கா: அங்கே கிடப்பது பாம்பா? கயிறா? 5. கொளல் வினா என்றால் என்ன? எ.கா. தருக. • தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது எ-கா: துவரம் பருப்பு உள்ளதா? எனக் கடைக்காரரிடம் கேட்பது. 6. கொடை வினா என்றால் என்ன? எ.கா. தருக. • பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது எ-கா: நண்பா, சாப்பிடுகிறாயா? என நண்பன் கேட்பது. 7. ஏவல் வினா என்றால் என்ன? எ.கா. தருக. • ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது. எ-கா: நீ படிக்கிறாயா? என்று அம்மா மகனிடம் கேட்பது. இரண்டாம் பருவத் தேர்வு – 2021 – 2022 பத்தாம் வகுப்பு – CBSE மாணவர்களுக்கான புதிய வினாத்தாள் அமைப்பு முறையில் முதல் பகுதி – இலக்கணம் – DESCRIPTIVE PATTERN இயல் – 5 – விடை வகை இலக்கண வினாக்கள் – 2 மதிப்பெண்கள் – பயிற்சி – 2 (22.01.2022) __________________________________________________________________________ 1. வினா என்றால் என்ன? ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினவுவதே (கேட்பதே) ‘வினா’ எனப்படும். இதன் வேறு பெயர்கள்: கேள்வி,வினவு 2. விடை என்றால் என்ன? ஒருவர் கேட்கின்ற கேள்விக்குத் தகுந்த பதில்(விடை) அளிப்பது விடை எனப்படும்.. இதன் வேறு பெயர்கள்: இறை,செப்பு, பதில். 3. விடை எத்தனை வகைப்படும் ?அவை யாவை ? விடை எட்டு வகைப்படும் . அவை. சுட்டு விடை 2 . மறை விடை 3 .நேர் விடை 4. ஏவல் விடை 5. வினா எதிர் வினாதல் விடை 6. உற்றது உரைத்தல் விடை 7. உறுவது கூறல் விடை 8 . இனமொழி விடை 1 . சுட்டு விடை 2 . மறை விடை எதிர்மறுத்துக் கூறல் 3 .நேர் விடை உடன்பட்டுக் கூறுதல் 4. ஏவல் விடை 5. வினா எதிர் வினாதல் விடை 6. உற்றது உரைத்தல் விடை 7. உறுவது கூறல் விடை 8 . இனமொழி விடை 4. விடையின் இரு பிரிவுகள் யாவை? அவை யாவை? 1. வெளிப்படை விடைகள்(செவ்வன் இறை) 2. குறிப்பு விடைகள்(இறை பயப்பன) 5. வெளிப்படை விடைகள் அல்லது செவ்வன் இறை விடைகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?  வெளிப்படை விடைகள்: 3 (செவ்வன் இறை) -3 1. சுட்டுவிடை , 2. மறை விடை , 3. நேர் விடை 6. குறிப்பு விடைகள் மொத்தம் எத்தனை அவை யாவை?  குறிப்பு விடைகள் – 5 (இறை பயப்பன) - 5 1.ஏவல் விடை ,2. வினா எதிர் வினாதல் விடை ,3. உற்றது உரைத்தல் விடை , 4. உறுவது கூறல் விடை , 5.இனமொழி 7.வெளிப்படை விடைகள் என்றால் என்ன?அதன் வேறு பெயர் என்ன? அவை யாவை ? விடைகள் நேரடியாக இருப்பின் வெளிப்படை விடைகள் எனப்படும். வேறு பெயர்: செவ்வன் இறை அவை : சுட்டுவிடை , மறை விடை ,நேர் விடை 8. குறிப்பு விடைகள் என்றால் என்ன ? அதன் வேறு பெயர் என்ன? அவை யாவை? விடைகள் குறிப்பாக இருப்பின் குறிப்பு விடைகள் எனப்படும். வேறு பெயர்: இறை பயப்பன. அவை: ஏவல் விடை , வினா எதிர் வினாதல் விடை , உற்றது உரைத்தல் விடை , உறுவது கூறல் விடை , இனமொழி விடை __________________________________________________ இரண்டாம் பருவத் தேர்வு – 2021 – 2022 பத்தாம் வகுப்பு – CBSE மாணவர்களுக்கான புதிய வினாத்தாள் அமைப்பு முறையில் முதல் பகுதி – இலக்கணம் – DESCRIPTIVE PATTERN இயல் – 5 – விடை வகை இலக்கண வினாக்கள் – 2 மதிப்பெண்கள் – பயிற்சி – 3 (22.01.2022) _____________________________________________________________________ 1. சுட்டு விடையை எடுத்துக்காட்டுடன் விளக்குக. சுட்டிக் கூறும் விடை சுட்டுவிடை எனப்படும். எ.கா: ' பள்ளி எங்கு உள்ளது ' என்ற வினாவிற்கு 'வலப்பக்கத்தில் உள்ளது ' எனக் கூறல். 2. மறை விடை என்றால் என்ன ? அல்லது எதிர் மறுத்துக் கூறும் விடை என்றால் என்ன? எ.கா. தருக. மறுத்துக் கூறும் விடை மறைவிடை அல்லது எதிர்மறுத்துக் கூறும் விடை எனப்படும் . எ.கா. ' பள்ளிக்கு வருவாயா ?' என்ற கேள்விக்கு ' வரமாட்டேன் ' என மறுத்துக் கூறுவது . 3. நேர் விடை என்றால் என்ன ? அல்லது உடன்பட்டுக் கூறும் விடை என்றால் என்ன? சான்று தருக. உடன்பட்டுக் கூறும் விடை நேர்விடை அல்லது உடன்பட்டுக் கூறும் விடை எனப்படும் . எ.கா. ' பள்ளிக்கு வருவாயா? ' என்ற கேள்விக்கு ' வருவேன் ' என்று கூறுவது. 4. ஏவல் விடையை சான்றுடன் விளக்குக. வினவியவரையே (கேட்டவரையே) ஏவுதல் ஏவல் விடை எனப்படும்.. எ.கா. ' இது செய்வாயா ?'என்று கூறும் பொழுது ' நீயே செய் ' என்று ஏவிக் கூறுவது . 5. வினா எதிர் வினாதல் விடை என்பது என்ன ? எ,கா, தருக வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும் . எ.கா' பள்ளிக்கு வருவாயா ' என்ற வினாவிற்கு ' வராமல் இருப்பேனா ' என்று கூறுவது. 6. உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன? எ.கா. தருக. வினாவிற்கு விடையாக நடந்ததையும் நடப்பதையும் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும். எ.கா.' நீ விளையாட வருகிறாயா ?' என்ற வினாவிற்கு ' கால் வலித்தது அல்லது வலிக்கிறது என்று உற்றதை உரைப்பது . 7. உறுவது கூறல் விடை என்பது என்ன ? எ.கா. தருக. வினாவிற்கு விடையாக இனிமேல் நடப்பதை அல்லது நேர்வதைக் கூறல் உறுவது கூறல் விடை எனப்படும் . எ.கா. ' நீ விளையாட வரவில்லையா ?' என்ற வினாவிற்கு ' கால் வலிக்கும் ' என உறுவதை உரைப்பது . 8. இனமொழி விடை என்றால் என்ன ? வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறுவது இனமொழி விடை எனப்படும். எ.கா. ' உனக்கு ஆடத் தெரியுமா ?' என்ற வினாவிற்கு ' பாடத் தெரியும் ' என்று கூறுவது . ____________________________________________________________ இரண்டாம் பருவத் தேர்வு – 2021 – 2022 பத்தாம் வகுப்பு – CBSE மாணவர்களுக்கான புதிய வினாத்தாள் அமைப்பு முறையில் முதல் பகுதி – இலக்கணம் – DESCRIPTIVE PATTERN இயல் – 5 – விடை வகை இலக்கண வினாக்கள் – 2 மதிப்பெண்கள் – பயிற்சி – 3 (22.01.2022) _____________________________________________________________________ 1. பொருள்கோள் என்றால் என்ன? ஒரு செய்யுளில் சொற்களை அல்லது அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் சேர்த்தோ, மாற்றியோ பொருள்கொள்ளும் முறை பொருள்கோள் எனப்படும். 2. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவையாவை? பொருள்கோள் எட்டு(8) வகைப்படும். அவை, 1.ஆற்றுநீர்ப் பொருள்கோள் 2. மொழிமாற்றுப் பொருள்கோள் 3.நிரல்நிறைப் பொருள்கோள் 4.பூட்டுவிற் பொருள்கோள் 5. தாப்பிசைப் பொருள்கோள் 6. அளைமறிபாப்புப் பொருள்கோள் 7. கொண்டு கூட்டுப் பொருள்கோள் 8. அடிமறிமாற்றுப் பொருள்கோள் 3. ஆற்று நீர்ப்பொருள்கோள் என்றால் என்ன? எ.கா. தருக பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கைப்போல சொற்கள் முன் பின் மாறாது நேராகப் பொருள் கொள்வது ஆற்று நீர்ப் பொருள்கோள் ஆகும் . எ.கா. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் அல்லது ”சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே” ( சீவகசிந்தாமணி ) 4. நிரல் நிறைப்பொருள்கோள் என்றால் என்ன? ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது ‘நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும். எ.கா. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது“ (திருக்குறள்) 5. நிரல் நிறைப்பொருள்கோள் வகை எத்தனை? அவை யாவை? வகை: 2 (அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள் (ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் 6. முறை நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எ.கா. தருக. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்கள் அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும் எ.கா.. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது“ (திருக்குறள்) 7. எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும். எ.கா. “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்“ (திருக்குறள்) 8. கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்றால் என்ன? எ.கா. தருக. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று. கூட்டிப்பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும். எ.கா. ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு. 9.

Translate