Search This Blog
Tuesday, February 18, 2014
Monday, February 17, 2014
பிரிவு மடல்
எனது
முதல் வடிவம் !!
அதுவும்
முத்தான வடிவம் !!
முயற்சியை
வெற்றியாக்கிய
வெற்றித்
திலகம் - மேலும்
எனக்குப்
பெருமை தேடித் தந்த
தரணியின்
மாணிக்கங்கள் …..
எந்த
ஒரு தாய்க்கும்
எத்தனை
செல்வங்கள் இருந்தாலும்
முதல்
செல்வத்தின் மேல் என்றும்
கரிசணை
அதிகமாகத்தான் இருக்கும்
அதைப்போல்
தான் எனக்கும்….. எத்தனை வகையான
மாணவர்களைப்
பார்த்தாலும் - இம்மாணவர்களிடம்
ஏனோ
என்னையறியாத தாகம், நேசம்……
தனயனாய்,
தோழனாய், நல் –
மாணாக்கராய்
என்றும் என்னுடன் இருந்து
என்னை
வழிநடத்தியவர்கள், வழிகாட்டியவர்கள்…….
இன்று,
வழிகாட்டியவர்களுக்கு வழியனுப்பு விழா !
விம்முகிறது
நெஞ்சம் , இருந்தும் விழைகிறது
விடைகொடுக்க…..
ஆம்
விண்
என்ற சொல்லை
எட்டுவதற்கும்,
முழு நிலா தோன்றும்
நாளைக்
காண்பதற்கும் முனைப்புடன் இருக்கிறேன்
எனது
முதல்வர்கள் என்றும்
எனதருமை
முதல்வர்களே என்பதை மீண்டும்
நிரூபித்துக்
காட்ட - இன்று
பற்றிய
கரத்தை விடுகிறேன் - மீண்டும்
இணைந்து
கரகோஷம் எழுப்ப J
Monday, February 3, 2014
முயற்சி ! பயிற்சி !! வெற்றி !!! என்று ……
முயற்சி
! பயிற்சி !! வெற்றி !!!
மணல் பரப்பும் மதிய வேளையில் – அழகிய
மணம் வீசும் மல்லிகைச் சரங்களாய் – மாணவர்கள்
மாதவம் செய்திட வேண்டுமடா – என்ற துணிவுடன்
மாமன்னன் அசோகச் சக்ரவர்த்திபோல் – களத்தில் முனைய
மிதமான புன்முறுவலுடன் - மாணவ மணிகள்
மீத்திறன் பெற்ற புத்துணர்வையும் புதுக்களிப்பையும் தந்து
முதல் என்றுரைத்து மிரட்சி கொள்ளச் செய்தனர் அனைவரையும்…
முதல் என்ற முத்து இரத்தினத்தைக் கேட்டதும்
மூழ்கி முத்தெடுத்த பிரமிப்பு என்னுள் கொண்டேன்..
மெல்ல மெல்ல இது கனவா ?? நனவா ??! – என்ற
மேலைநாட்டினரின் மேம்போக்குத்தனம்போல் என் வினா…. ஆம் !
மை ( மெய் ) உண்மைதான் என்றுரைக்க
மொகலாய சாம்ராஜ்யம் மீண்டும் புத்துணர்வு பெற்றதுபோல்
மோப்பக்குழைந்து அக மகிழ…
மௌவலான என் மாணவச் செல்வங்களின்
கரம் பற்றினேன் … கரகோஷம் எழுப்பினேன் …..
முயற்சி ! பயிற்சி !! வெற்றி !!! என்று
……
Subscribe to:
Posts (Atom)