Search This Blog

Monday, August 2, 2021

ABIMAANAM - AUTHOR. N.DEIVA SIGAMANI

AMMA MANASU - AUTHOR . N.DEIVA SIKGAMANI

பத்தாம் வகுப்பு - இயல் – 3 –இலக்கணப் பயிற்சி,செய்யுள் பயிற்சி வினாக்கள் & உரைநடை, செய்யுள் முக்கிய வினாக்கள்.

பத்தாம் வகுப்பு - இயல் – 3 –இலக்கணப் பயிற்சி,செய்யுள் பயிற்சி வினாக்கள் & உரைநடை, செய்யுள் முக்கிய வினாக்கள். I. கோடிட்ட இடங்களை நிரப்புக: 1. ஒரு சொல் முற்றுப் பெற்றால் அது ______ எனப்படும் 2. அடித்தான், நெய்கிறான், நிறைந்தது என்பது _____ வினைமுற்று. 3. செய்பவனை மட்டும் காட்டுவது. காலத்தை வெளிப்படையாகக் காட்டாது _____ 4. காலம் வெளிப்படையாகக் காட்டி நிற்பது ____ 5. பொன் என்னும் பொருளை உடையவன் _____ 6. ஒரு எச்ச வினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்தால் _____ எனப்படும் 7. ஓடிய என்ற எச்ச வினை மாணவன் என்ற பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது ____ 8. பெயரெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டும். 9. காலத்தை வெளிப்படையாகக் காட்டாத பெயரெச்சம் _____ 10. ஓர் எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசியில் ‘அ’ கெட்டு (மறைந்து) ‘ஆ’ என்ற இறுதி ஓசையுடன் முடிவது ___ 11. ஓர் எச்சவினை வினைச்சொல்லைக் கொண்டு முடிந்து பொருள் தருவது____ 12. காலத்தை வெளிப்படையாகக் காட்டி வினைக்காக எஞ்சி நிற்பது ____ 13. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை_____ 14. மெல்ல நடந்தான் என்பது ___ வினையெச்சம். 15. தொக்கி(மறைந்து) வந்து பொருள் தருவது_______ 16. ஒரே சொல் அடுத்தடுத்து வந்து, பிரித்தால் பொருள் தருமாயின் அது ________ எனப்படும். 17. அன்றே அன்றே – என்பது அசைநிலை பொருளில் வந்த ____ 18. வந்தேன் வந்தேன் என்பது ______ 19. போ போ போ – என்பது ____ பொருளில் வந்த அடுக்குத்தொடர். 20. அடி அடி கொல் கொல் கொல் – என்பது ___ பொருளில் வந்த அடுக்குத்தொடர். 21. வருக வருக வாழ்க, வாழ்க வாழ்க – என்பன ____ பொருளில் வந்த அடுக்குத்தொடர். 22. கெட்டேன் கெட்டேன் கெட்டேன் , வாழேன்,வாழேன் – என்பது ___பொருள் சார்ந்த அடுக்குத்தொடர். 23. பாம்பு பாம்பு பாம்பு – என்பது ____ முறை அடுக்கி வந்த அடுக்குத்தொடர். 24. அசைநிலை, பொருள்நிலை இசைநிறைக் கொரு சொல் இரண்டு, மூன்று, நான்கு எல்லைமுறை அடுக்கும் – இது ___ தொடர். 25. ஒரே சொல் அடுத்தடுத்து வந்து, பிரித்தால் பொருள் தராமல், வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி நிற்பது _____ 26. _______ இரட்டில் பிரிந்திசையா. 27. பெயர், வினைச்சொற்களைச் சார்ந்து, அவற்றின் குணத்தை உணர்த்தி வரும் சொற்கள் _____ 28. சாலச்சிறந்தது (மிகவும்) - சால உறுபொருள் (மிகுந்த பொருள்) - உறு தவச்சிறிது ( மிகவும் சிறிது) - தவ நனி பேசினான் (மிகுதியாகப் பேசினான்) - நனி இடும்பைகூர் வயிறு (துன்பம் மிக்க வயிறு) - கூர் கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) – கழி இவையனைத்தும் ஓரு குணம் தழுவிய ____ 29. சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள் அனைத்தும் ஒரே பொருளை உணர்த்தி நிற்பதால் ________உரிச்சொல் 30. ஒரே சொல் பல பொருள்களை உணர்த்த பயன்படுவது 31. கடி என்னும் சொல் கடிநகர்-காவல்நகர், கடிமணம்-நல்லமணம் என பல குணம் தழுவி வருவது ________சொல் 32. மாநெறி 33. மாமழை மாநகர் மாமலை – இவைகள் ஒரே சொல் பல பொருளை உணர்த்தி வரும் _____. 34. அணையா(த) விளக்கு, ஒன்றா(த)ப் புகழ் – எவ்வகைப் பெயர்? 35. ஒன்றா(த)ப் புகழ் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயராக்குக. 36. செய்து முடித்தாள் – இலக்கணக்குறிப்பு தருக. 37. படித்த ஓடிய விளையாடிய - வினையெச்சமாக்குக. 38. படித்தான் ஓடினான் விளையாடினான் – இலக்கணக் குறிப்பு தருக. 39. சொல் ஆழ் வா – பெயரெச்சமாக்குக. 40. சொல்லி ஆழ்ந்து வந்து - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சமாக்குக. 41. முதல் வேற்றுமை வேறு பெயர் ____ 42. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய ஆறு வேற்றுமை உருபுகளும் சொற்களுக்கு இடையில் மறையாமல் வருவது _____ 43. திருக்குறளைக் கற்றான், பாலை அருந்தினான் என்பன ____ தொடர். 44. அத்தைக்கு மகள்,பள்ளிக்குச் சென்றான்,கூலிக்கு வேலை – முதலியன ____ தொடர். 45. மாமன் வீடு – ஆறாம் வேற்றுமைத் தொகா நிலைத்தொடராக்குக. 46. ஹரி வந்தான் – எவ்வகைத் தொடர்? 47. அழுதது குழந்தை – இதில் எச்சம் எது? 48. மற்றொன்று – இதில் இடைசொல் எது? 49. பிரியா வந்தாள் – விளித்தொடராக்குக? 50. விளி என்றால் ___ என்பது பொருள். 51. ஓர் எழுவாய்த்தொடர் _____ _____ _____ என்ற பொருளில் அமையும். 52. தொகை நிலைத்தொடர்கள் _____மறைந்து வரும் தொடர்களாகும். 53. உருபுகள் வெளிப்படையாக வரும் தொடர் ___ 54. தொகை நிலைத்தொடர்கள் மொத்தம் ___ 55. தொகா நிலைத்தொடர்கள் மொத்தம் ___ 56. வேற்றுமையின் வகைகள் ___ 57. இரட்டைச் சொல்லாக வருவது ____ 58. கல கல என்பது ___ சொல். 59. வாழ்க வாழ்க, பட பட, குறு குறு – இதில் அடுக்குத்தொடர் எது? 60. மற்றுப்பிற என்பதில் “மற்று” என்பது __- 61. உறுமீன் என்பது ___ 62. உடைந்த நாற்காலி என்பது ___ தொடர். 63. இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு___ 64. ஐந்தாம் வேற்றுமைக்குரிய உருபு __ 65. வந்த கண்ணன், வந்தான் ராமன்,யுவா வா – இவற்றில் விளித்தொடர் எது? 66. ஏழாம் வேற்றுமைக்குரிய உருபு ___ 67. உண்டான் சாத்தன்,உண்ட சாத்தன், உண்டு சென்றான், சாத்தா வா! சாத்தன் வந்தான். - இத்தொடர்களை வகைப்படுத்துக. 68. குடத்தை வனைந்தான், வாளால் வெட்டினான், புலவர்க்குக் கொடுத்தான், மலையின் இறங்கினான், சாத்தனது கால், சாத்தனிடம் உள்ளது. – இவைகள் எத்தொடர் வகைகள் என வரிசைப்படுத்துக. உருபுகளைக் குறிப்பிடுக. 69. தொடர் ___ வகைப்படும் 70. தொகை நிலைத்தொடர், தொகா நிலைத்தொடர் என்பது ____ வகைகள். 71. பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் வருவது _____தொடர். 72. முற்றுப்பெறாத வினைச்சொல்,பெயர்சொல்லைக் கொண்டு முடிவது _____ எனப்படும். 73. வினை முற்றுடன் ஒரு பெயர்ச்சொல் வருவது _____ தொடர் ஆகும். 74. பெயர்ச்சொல் ___ வகைப்படும். 75. முற்றுப்பெறாத வினைச்சொல் மற்றொரு வினையைக் கொண்டு முடிவது _____ 76. _______ உருபுகள் பயின்று வரும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்கள் ஆகும். 77. இடைச்சொல்லை தொடர்ந்து பெயரோ வினையோ வருவது _______தொடர் 78. விளியுடன் வினைச்சொல் வருவது _______ ஆகும். 79. உரிச்சொல்லைத் தொடர்ந்து பெயரோ வினையோ வருவது ______தொடர் ஆகும். 80. ஒன்றிற்கு மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது _______ பெயரெச்சங்கள் எனப்படும் . 81. கேட்க வேண்டிய பாடல் , சொல்லத் தக்க செய்தி .- இவைகள் ___ பெயரெச்சங்கள் 82. வேற்றுமை தொகா நிலைத்தொடர்கள் ___ வகைப்படும். 83. கதிரவா வா ! என்பதை எழுவாய்த்தொடராக மாற்றுக. 84. ______ வேற்றுமைகளுக்கு உருபு இல்லை. 85. படித்த இளைஞன், பார்த்த ஊர்,முறிந்த கால், சுவைத்த இனிப்பு, முடிந்த தேர்தல் - கொடுக்கப்பட்ட எச்சங்கள் எவ்வகை? வேறுபாடு கண்டறிந்து வகைப்படுத்துக. 86. பாரதிதாசன் பாடினார், பாரதி வாழ்க! – எவ்வகைத் தொடர்? 87. காந்தி தலைவர்,இவர் பெரியார் – இவைகள் எத்தொடர்? எப்பொருளில் அமைத்த தொடர்? 88. அவன் யார்? மலர் யாது? – எவ்வகைப்பொருளில் வந்த தொடர்? 89. கம்பனே, தம்பீ,நண்பீ,அம்மா,முருகா,கந்தா, செல்வா – எத்தொடரின் அடக்கம்? 90. வாழ்ந்த மனை, வாழ்கிற மனை, வாழும் மனை – எச்சங்களைக் காலங்களோடு வகைப்படுத்துக. 91. பாடத்தைப் படித்தான்,கத்தியால் குத்தினான்,மகளுக்குக் கொடுத்தான்,ஏணியில் இறங்கினான், நண்பனது வீடு, வாங்கண் நிலா- தொகை நிலைத்தொடராக்குக. 92. எச்சத்தொடர் ___ வகைப்படும். 93. முற்றுத் தொடர் ___ வகைப்படும். 94. ஐயோ ஐயோ; இழப்பு இழப்பு இழப்பு என்பன ___ பொருளில் வரும் ___ தொடர். 95. நல்குமே நல்குமே, பாடுகோ பாடுகோ ___ பொருளில் வந்த ___ அடுக்குத்தொடர். 96. சென்று வந்தான் – எதிர்கால வினையெச்சமாக மாற்றுக. 97. சிரிக்கின்ற நிகில் – இறந்தகாலமாக மாற்றுக. 98. பேசிய அஞ்சனா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக்குக. 99. சிபி நந்தன் வருவானா? – எழுவாய் வினையாக மாற்றுக. 100. நான் யார்? – எவ்வகைத்தொடர்? II. விடையளிக்க. ( செய்யுள் வினாக்கள்)(காசிக்காண்டம்,மலைபடுகடாம்) 1. ஆற்றுப்படுத்துதல் என்றால் என்ன? 2. முகமன் சொற்களை எழுதுக 3. காசிக்காண்டம் – குறிப்பு வரைக 4. மலைபடுகடாமில் குறிப்பிடப்படும் தினைச்சோற்று விருந்தினைக் குறிப்பிடுக. 5. ஆற்றுப்படை என்றால் என்ன? 6. “மன்னனின் கூத்தர்கள்” என்று கூறுங்கள்! என யார் யாரிடம் கூறியது? ஏன்? 7. மலைப்படுகடாம் – நூல் குறிப்பு வரைக. 8. காசிக்காண்டத்தின் ஆசிரியர் குறிப்பு வரைக. 9. உங்கள் வீட்டில் கடைப்பிடிக்கும் விருந்தோம்பல் முகமன் சொற்களை எழுதுக. 10. உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு நீங்கள் விருந்தளிக்கும் விருந்தோம்பல் முறையை விளக்குக. III. விடையளிக்க. (உரைநடை வினாக்கள்) (விருந்து போற்றுதும்) 1. விருந்தோம்பல் என்றால் என்ன? 2. இன்மையிலும் விருந்தோம்பலை விளக்குக. 3. பெரியபுராணத்தில் காணப்படும் விருந்தோம்பல் நிகழ்வை விளக்குக. 4. விருந்தோம்பல் குறித்து புறநானூறு குறிப்பிடும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. 5. விருந்தோம்பலின் அடிப்படைப் பண்புகள் யாவை? 6. விருந்தோம்பலில் காணப்படும் அற உணர்வுக் கருத்துகளை எழுதுக. 7. தமிழர் மரபும் – விருந்தோம்பலும் குறித்த செய்திகளைக் குறிப்பிடுக. 8. விருந்தினரை எதிர்கொண்ட தன்மையாகவும் அவர்களின் பழக்கவழக்கமாகப் பின்பற்றிய முறையினை விளக்குக. 9. அல்லில் ஆயினும் – தனித்து உண்ணாமை – விளக்குக 10. விருந்தோம்பல் – அன்று – இன்று – குறிப்பிடுக. IV. செய்யுள் பொருளுணர்திறன்(காசிக்காண்டம், மலைபடுகடாம்) 1. ஆற்றுப்படுத்துதல் என்பது ___ என்பதாகும். 2. தினை என்பதன் பொருள் – 3. கிழவிர் போல – பொருள் தருக. 4. நும் இல்போல் – பொருள் தருக 5. கொற்கைத் துறைமுகம் அமைந்துள்ள இடம் ___ 6. கானவர்கள் செய்து வைத்த உணவுகள் _____ 7. லிங்கபுராணம், நைடதம், கூர்மபுராணம் என்பன ___ எழுதிய நூல்கள். 8. காசிக்காண்டம் எதன் பெருமையை எடுத்து இயம்புகிறது? 9. தன் அருகுற – என்பதன் பொருள்? 10. காசிக்காண்டத்தில் நமக்குப் பாடப்பகுதியாக வந்த பகுதி ___ 11. அதிவீர்ராம பாண்டியருக்கு வழங்கப்பட்டப் பட்டப்பெயர் ___ 12. கடினப்பாதை வழியில் இருக்கும் மரமாகக் கூத்தன் கூறியது? 13. எல்லாச் சமூகங்களிலும் போற்றப்படும் பண்பாடுகளுள் முதன்மையானது? 14. விருந்தினராக ஒருவர் வந்தால் முதலில் கூறும் முகமன் சொல் எது? 15. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்கள் மொத்தம் ___ 16. காசிக்காண்டத்தில் கூறப்பட்ட விருந்தோம்பல் பாடலுக்கு ஒப்பாகக் காட்டப்பட்ட நூல் ___ 17. வருக! – இலக்கணக் குறிப்பு தருக. 18. மகிழ்வன செப்பல் – பொருள் தருக. 19. நறுந்தொகையின் வேறுபெயர்___ 20. காசிக்காண்டத்தில் குறிப்பிடப்படும் பாடுபொருள் ? 21. அசைஇ – இலக்கணக் குறிப்பு தருக. 22. பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்’ – என்று கூறியவன்? 23. வயிரியம்,வேவை,பொம்மல் – பொருள் தருக. 24. மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் ___ 25. சேட் புலம்பு அகல – பொருள் தருக. 26. மான விறல்வேள் – யார்? 27. குரூஉக்குறை, பரூஉக்குறை – பொருள் & இலக்கணக்குறிப்பு தருக. 28. ஆரிப்படுகர் – யார்? 29. சிலம்பு, இறடி – பொருள் தருக. 30. எரியும் நெருப்பைப்போல் ஒளிரும் பூங்கொத்துகளைக் கொண்ட மரம் ___ 31. மானமும் வெற்றியும் உடைய மன்னன்? 32. கலைத்திறன்களை நிகழ்த்திக் காட்டி மக்களையும் மன்னனையும் மகிழ்வித்தவர்கள் ____ ? 33. பகைவரைப் பெறாமல் போர் செய்யும் வலிய முயற்சியை உடையவன்? 34. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பன ___ நூல்கள். 35. மலைபடுகடாம் __ நூல்களுள் ஒன்று. 36. மலைபடுகடாமின் வேறு பெயர்___ 37. மலைபடுகடாமின் ஆசிரியர்? 38. மலைபடுகடாம் ஆசிரியரின் பெயர்? 39. வளம் நிறைந்த புது வருவாயினை உடைய ஊராகக் கூத்தன் கூறியது? 40. ஒப்புடன் முகமலர்ந்தே – இப்பாடல் வரிகல் இடம்பெற்ற நூல்? 41. ஏழுதல் முன் மகிழ்வன செப்பல் – இப்பாடல் வரி இடம்பெற்ற நூல்? 42. வியத்தல், நோக்கல், செப்பல், இருத்தல் – இலக்கனக் குறிப்பு தருக. 43. நன்மொழி – இலக்கணக் குறிப்பு தருக. 44. உரைத்தல், இருத்தல் – எதிர்மறைத் தொழிற்பெயராக்குக. 45. இவ்வொன்பான் – பொருள்? 46. விருந்தோம்பலில் குறிப்பிடப்படும் எட்டாவது முகமன் சொல்லை எழுதுக. 47. துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் முதலிய பாடுபொருள்களைக் கூறும் நூல்? 48. மலைபடுகடாமில் இடம் பெற்ற மொத்தப் பாடல் அடிகள்? 49. பொழிந்த, மலைந்து – இலக்கணக் குறிப்பு தருக. 50. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துவது ___ V. திருக்குறள் (இயல் – 3) 1 – 10 திருக்குறள்கள். 1. நாள்தொறும் நாடி _____ மன்னவன் நாள்தொறும் ___ கெடும். 2. ___ எல்லாம் அரிதே பெரியாரைப் _____ தமராக் கொளல் 3. இடிப்பாரை இல்லாத ஏமரா ___ கெடுப்பார் ___ கெடும். 4. காமம் வெகுளி மயக்கம் ___ நாமம் _____ நோய். 5. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் _____ அறிவிலா தார். 6. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் ___ _____ காண்பது அறிவு. 7. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ___ ___ ஓம்பப் படும். 8. வேலொடு நின்றான் ____ றதுபோலும் _____ நின்றான் இரவு. 9. பல்லார் பகைகொளலிற் ___ தீமைத்தே நல்லார் ____ விடல். 10. ஒழுக்கத்தின் ___ மேன்மை இழுக்கத்தின் ____ எய்தாப் பழி. VI. “பசித்தவருக்கு உணவிடுதல் ஓர் அறச்செயல்” என்ற கூற்று விளக்கும் கரிசல் கதையை நும் பாடப்பகுதி கொண்டு நிறுவுக.

ஆண்டு இறுதித் தேர்வு – (2021)இலக்கணப் பயிற்சி வினாக்கள் இயல் – 2,தொகை நிலைத் தொடர்

ஆண்டு இறுதித் தேர்வு – (2021)இலக்கணப் பயிற்சி வினாக்கள் இயல் – 2,தொகை நிலைத் தொடர்  ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.  சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.  தொடர்களைத் 1. தொகைநிலைத் தொடர் - Elliptical Expressions, 2. தொகாநிலைத் தொடர் - Unlliptical Expressions என இரண்டாகப் பகுக்கலாம்  சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் ‘தொகை’ என்பர்  தொக்கு – தொகை – பொருள்? மறைந்து வருதல்  தொகை’ ஆறு வகைப்படும். அவை, 1. வேற்றுமைத் தொகை 2. வினைத் தொகை 3. பண்புத் தொகை 4. உவமைத் தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித் தொகை  வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும்.  ‘நூல் படித்தான்’ என்னும் தொடர்,____ இதில் மறைந்து வந்துள்ள உருபு __ஐ- 2-ம் வே.உருபு  நூலைப் படித்தான்’என்பது 2-ம் வே.உருபு வெளிப்படை  ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு  தலை வணங்கினான்’ என்பது மூன்றாம் வே.தொகை  ‘தலையால் வணங்கினான்’மூன்றாம் வேற்றுமை தொகா நிலைத் தொடர்(ஆல்)  மூன்றாம் வேற்றுமை உருபுகள் __ ஆல்,ஆன்,ஒடு,ஓடு  மங்கை மகள்’ என்பது’ – நான்காம் வே. தொகை  மங்கைக்கு மகள் என்பது ___ நான் காம் வே.விரி(தொகா)  நான்காம் வேற்றுமை உருபு ___கு  ‘நாடு நீங்கினான்’ என்பது – 5-ம் வே,தொகை  ‘நாட்டின் நீங்கினான் –ஐந்தாம் வே.தொகா நிலைத்தொடர்(இல்,இன்)  ஐந்தாம் வேற்றுமை உருபுகள் –இல்,இன்  வேலன் சட்டை என்பது __ ஆறாம் வே.தொகை  வேலனது சட்டை என்பது __ ஆறாம் வே.தொகா நிலைத் தொடர்  ஆறாம் வேற்றுமை உருபு __ அது  மரக்கிளி என்பது ___ ஏழாம் வே.தொகை  மரத்தின் கண் கிளி என்பது __ ஏழாம் வே.தொகா நிலை.தொடர்  ஏழாம் வேற்றுமை உருபு __ கண்  முதல் வேற்றுமையின் வேறுபெயர் __ எழுவாய் வே.  எட்டாம் வேற்றுமையின் வேறுபெயர் __-விளி வேற்றுமை(அழைத்தல்)  வேற்றுமை என்பது ____ பொருளை வேறுபடுத்த வருவதாகும்.பெயர்ச்சொல்லின்  முதல் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ____ தொடர்கள் ஆகும். தொகா நிலைத்தொடர்கள்  வளைக்கை என்பது ___ வளையை உடைய கை(2-ம் வே,உருபும் பயன் உடன் தொ.தொகை  தொகை நிலைத்தொடரில் வராத இரு வேற்றுமைகள் ___ எழுவாய்(முதல்) எட்டாம்  காலம் காட்டும் இடைநிலை மறைந்து வருவது வினைத்தொகை. இவ்வாறு, காலம் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.  ‘குடி நீர்’சேர்மதி, ஓங்கு நீர், கொய்மலர்,திருந்துமொழி என்னும் தொடர். - வினைத்தொகை  குடித்த நீர், குடிக்கும் நீர், குடிக்கின்ற நீர் என முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் தந்து காலம் காட்டும் இடை நிலைகள் மறைந்து வினை தொக்கி நிற்பது ___ வினைத்தொகை  அலைகடல், பாய்புலி, உண்கலம், ஆடுகொடி, ஊறுகாய்.. வினைத்தொகை  ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை  நிறத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புப்பெயர்கள் பசுமை,நீலம்,வெண்மை  குணத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புச் சொற்கள்: நன்மை, தீமை,கொடுமை,பொறாமை.  சுவையைக்குறிக்கும் சொற்கள்: காரம்,புளிப்பு,கசப்பு  வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்: சதுரம்,வட்டம்,நாற்கரம்  பண்புப்பெயர்கள், நிறம்,சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும்.  பண்பை விளக்கும் உருபு மறைந்து (தொக்கு) வருவது பண்புத் தொகை.  செந்தாமரை’ என்பது ‘செம்மையாகிய தாமரை’ என விரியும். இடையில், ‘மை’ என்னும் பண்புப் பெயர் விகுதியும் ‘ஆகிய’,ஆன என்னும் பண்பு உருபும் மறைந்து வருவது பண்புத்தொகை  வெண்ணிலவு, இன்சுவை, வட்டக்கல்,உவர் நீர்,முத்தமிழ்,வட்டப்பாறை, தொன்மக்கள், பழந்தமிழ். - பண்புத்தொகை  உவமானம் உவமேயங்களுக்கு இடையில் உவம உருபு மறைந்து வருவது __ உவமைத்தொகை  தேன்மொழி’ என்பது உவமைத்தொகை  ‘தேன்போன்ற மொழி’ என விரிவது ___ விரி உவமை  உவமானம் உவமேயங்களுக்கு இடையில், ‘போலும்’புரைய,அன்ன,இன்ன,மான,கடுப்ப போன்ற _____மறைந்து வருவது உவமைத்தொகை. உவம உருபுகள்  ‘மலர்ப்பாதம்’ ‘கயல்விழி’ போல்வன ____ உவமைத்தொகை  உவமை வேறு உவமேயம் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று ஒற்றுமைப்படுத்த வருவது ___உருவகம் ____________________________________________________________________________ ஆண்டு இறுதித் தேர்வு – 2021 இலக்கணம் – இயல் – 2 தொடர்ச்சி-2  உருவகத்தில் முதலில் நிற்கும் சொல் ____ இரண்டாவது நிற்கும் சொல் __ உவமேயம்,உவமை  உவமைத்தொகையில் முதலில் நிற்கும் சொல் ___ இரண்டாவது நிற்கும் சொல் ___ இரண்டிற்கும் இடையில் மறைந்து வருவது __  உவமைத்தொகையின் வேறு பெயர்கள் __ உவமை, உவமேயம்…போன்ற  புலிக் கொற்றன், மழைக்கை, துடியிடை, கிளிமொழி, கற்பக வள்ளல், மதிமுகம்", மலரடி, கமலக்கண், கனிவாய்,தேன்மொழி, மான்விழி,வாள் மீசை, கயல்விழி ___ இவற்றில் உவமைச்சொற்கள், உவமேயச் சொற்களைச் சுட்டிக் காட்டுக.  உவமை ___ வகைப்படும்.அவை ___, ___  தொகை உவமை, உவமைத்தொகையில் ___ உருபு மறைந்து வரும்.  விரிஉவமையில் ___ வெளிப்படையாக வரும்.  உவமைத்தொகை, வினை,பயன், மெய், உரு என்ற பொருளில் வரும்.  மலர்முகம்,மலர்க்கை,தாய்மொழி,கயல்விழி,அன்னைத்தமிழ், முத்துப்பல், உவமைத்தொகை - உருவகம்  மலர்முகம் - முகமலர்  மலர்க்கை - கைமலர்  தாய்மொழி - மொழித்தாய்  கயல்விழி - விழிகயல்  அன்னைத்தமிழ் - தமிழன்னை  மலர்விழி - விழிமலர் .  இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று கூறுவது  ஒரு பெண்ணின் முகத்தை பார்த்து. மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுவது ___.  தார் வேந்தன், நீர்த்தடம்,போர்க்குகன்  ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை  நிறத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புப்பெயர்கள் பசுமை,நீலம்,வெண்மை  குணத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புச் சொற்கள்: நன்மை, தீமை,கொடுமை,பொறாமை.  சுவையைக்குறிக்கும் சொற்கள்: காரம்,புளிப்பு,கசப்பு  வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்: சதுரம்,வட்டம்,நாற்கரம்  பண்புப்பெயர்கள், நிறம்,சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றை  இருபெயரொட்டுப் பண்புத்தொகை - இது பண்புத் தொகையின் ஒரு வகையாகும்.  மூவேந்தர் = மூன்று + வேந்தர், சேவடி", "செங்கண்", "நெடுங்கடல்", "மூதூர்", "தண்தயிர்", "பைந்தொடி", "வெண்சிலை", "நாற்படை"  இரு பெயரொட்டுப் பண்புத்தொகை இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும்.  இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் முதல்சொல் சிறப்பு பெயர்ச்சொல்லாக இருக்கும்.  இருபெயரொட்டுப் பன்புத்தொகையில் இரண்டாவது சொல் பொதுப் பெயர்ச்சொல்லாக இருக்கும்.  பனைமரம் என்னும் சொல்லில் பனை என்பது சிறப்புப்பெயர். மரம் என்பது பொதுப்பெயர். சிறப்புப் பெயர், பொதுப்பெயர் இரண்டுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்  செண்பகப்பூ: செண்பகம் சிறப்புப் பெயர். பூ பொதுப்பெயர்  பச்சைப் பட்டு – இருபெயரொட்டு பண்புத் தொகை  வண்ணத்துப்பூச்சி, மின்மினிப்பூச்சி.என்பன __  சாரைப்பாம்பு, தமிழ்மொழி, கோரைப்புல், தைத்திங்கள், அவியுணவு, தவத்தொழில், அரிமான், அந்திமாலை, உரைக்கல், அறவினை, மாமரம், மடித்தலம், பாரதநாடு, வேற்படை, கற்புக்கடம், மல்லிகை மலர், செருக்களம், அவைக்களம்,  பால் குடித்தான் - இரண்டாம் வேற்றுமைத் தொகை  பால் குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை  தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை  பொன் வளையல் - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை  என் மகள் - நான்காம் வேற்றுமைத் தொகை  குழந்தைப் பால் - நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை  ஊர் நீங்கினான் - ஐந்தாம் வேற்றுமைத் தொகை  வாய்ப்பாட்டு - ஐந்தாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன்தொக்க தொகை  நண்பன் வீடு - ஆறாம் வேற்றுமைத் தொகை  மலைக் கோயில் - ஏழாம் வேற்றுமை  தண்ணீர்ப் பாம்பு - ஏழாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன் தொக்க தொகை  ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்; உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை.  அன்மொழி என்பது அல் + மொழி எனப் பிரியும். அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள்.  தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது.  தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது.  அன்மொழித்தொகை என்பது, வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத் தொடர்மொழிகளுக்கு உரிய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிறசொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தும்.  பூங்குழல் வந்தாள், பொற்றொடி வந்தாள், "ஆயிழை வந்தாள், சுடுகதிர் எழுந்தான்,தேன்மொழி நகைத்தாள், இன்மொழி பேசினான் – என்பது ___  எண்ணல்,எடுத்தல், முகத்தல்,நீட்டல் எனும் அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வருவது எண்ணும்மை.  இரவு பகல்’ என்பது ‘இரவும் பகலும்’ என விரியும். இடையில் ‘உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து வருவது, உம்மைத் தொகை எனப்படும்.  கபிலபரணர்’, ‘உற்றார் உறவினர்’  நாழி ஆழாக்கு, சாண்,அரை, ஆடல்,பாடல் – எண்ணும்மையாக்குக.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்

Translate