Search This Blog

Sunday, September 6, 2015

அபிநயா- விமலா கான்வெண்ட்..இராமாபுரம்



ஆசிரியர் தின விழா




Saturday, September 5, 2015

ஆசிரியர் தின வாழ்த்துகள் - 2015 - 2016



ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்- 2015 -16



அன்றலர்ந்த மலருக்கு ஒப்பானவர்
ஆன்றோர்களின் அறிவுப்பாதையில் நடப்பவர்.
இறைவனின் நிழலாய் நிற்பவர்
ஈஸ்வரனையும் ஈஸ்வரியையும் ஒத்தவர்
உலகமே போற்றும் உரிமையுடையவர்கள்
ஊராளப் பிறந்தவர்கள்
எட்டுத் திக்கும் தித்திப்பவர்
ஏட்டுச்சுரைக்காயின்றிப் போதிப்பவர்
ஐயையின் தலைமைப் பீடமாய் விளங்குபவர்.
ஒன்று கொலாம் என உரைக்க உகந்தவர்.
ஓரி காரியை விட ஓங்கியவர்.
ஔவியம் விலக்கியவர்.
அஃதே நமது ஆசிரியர்.
                                      அதுமட்டுமா,
பக்க பலமாய் இருப்பவர்.
பாங்குடன் பணியைப் புரிபவர்.
எச்சூழ்நிலையிலும் ஏற்றம் காண்பவர்.
எஞ்ஞாயிறாய் ஒளி வீசுபவர்.
பாரதக் கொடியாய் பாரினில் பறப்பவர்.
பண்ணிசைத்து பாடம் பயிற்றுபவர்.
காத்திருந்தும் கடமையை முடிப்பவர்.
காந்த சக்தி ஆற்றல் பெற்றவர்.
தப்பு தாளங்களைத் தடை செய்பவர்.
தாம் என்ற இறுமாப்பு இல்லாதவர்.
பாய்மரக்கப்பலாய் பயணிப்பவர்.
பார்த்தோரெல்லாம் கை தொழும் பண்பாளர்.
பல்லுயிர் ஓம்புதலை பறை சாற்றுபவர்.
பவ்வியமாய்  பல கலை ஆற்றுபவர்.
தாழ்ப்பாள் இல்லா தளிர் மனம் படைத்தவர்.
தாள் போற்ற மறக்காதவர்.
மாற்றம் ஒன்றே மாறாததென எண்ணுபவர்.
மான் போன்று துள்ளி நடை போடுபவர்.
                                      இது மட்டுமா…
கலங்கரை விளக்கமாய் காட்சியளிப்பவர்.
காலம் கடந்தும் கருத்தினில் நிற்பவர்.
கிண்கிணி மணியாய் ஒலிப்பவர்.
கீதத்தின் மொழியைப் பெற்றவர்.
கூலவாணிகனாரின் கூர்மையை ஒத்தவர்.
கெசவல்லியாய் மிளிர்பவர்.
கேள்வி ஞானம் நிறைந்தவர்.
கொடிக் கம்பம்போல் உயர்ந்து நிற்பவர்.
கோள்களாய் வலம் வருபவர்.
கௌரவர்களை கதம் செய்பவர்.
                             இன்னும் சொல்லவா…
சர்வகலா சாலையாக சஞ்சரிப்பவர்.
சாமானியர்களையும் சமாளிப்பவர்.
சிவப்புக் கம்பளமாய் சிறப்பவர்.
சீர் சீராய் நின்று தளைகளைத் தருபவர்.
சுடர்விடும் ஜோதியாய் லயிப்பவர்.
சூர்ப்பனகையை துற்றமென அழிப்பவர்.
செம்மொழியாய்த் தெளிபவர்.
சேது சமுத்திரமானவர்.
சைதன்யர்களை உருவாக்குபவர்.
சொற்கோபுரமாய் சொல்லாற்றுபவர்.
சோதனைகளை வெல்பவர்.
சௌந்திரர்களாய் வாழ்பவர்.
தடம் பதிக்கும் தங்க திலகர்.
தார்மீக வேலையாற்றும் வீர வேந்தர்.
தில்லை நடராசரின் திகம்பர செயலர்.
தீவினையைத் தீர்ப்பவர்.
துள்ளலோசை உடையவர்.
தூங்கா வனத்தவர்.
தெள்ளமுது போன்றவர்.
தேமதுரத் தமிழோசை தந்தவர்.
தையல் நாயகர்.
தொன்று தொட்டு வாழ்பவர்.
தோணியாய்த் தொய்ப்பவர்.
தௌவாரிகளாய்த் திகழ்பவர்.
பம்பரமாய் சுழல்பவர்.
பாலகர்களை உருவாக்குபவர்.
பித்தத்தை  நீக்குபவர்.
பீதாம்பரத்தை அணிந்தவர்.
புகழுரைகளை விரும்பாதவர்.
பூமாலையானவர்.
பேரின்பத் திறவுகோலானவர்.
பைந்தமிழாய்த் தவழ்பவர்.
பொற்றாமரைக் குளமானவர்.
போதுமென்ற மனமில்லாதவர்.
பௌவத்தை ஒத்தவர்.
மண்ணுலகின் மாணிக்கமானவர்.
மாரியாய்ப் பொழிபவர்.
மின்னலாய் மின்னுபவர்.
மீத்திறன் பெற்றவர்.
முத்தமிழை வளர்ப்பவர்.
மூவேந்தர் வழி வந்தவர்.
மெத்தனப் போக்கு இல்லாதவர்.
மேதையை உருவாக்குபவர்.
மையலை விரட்டுபவர்.
மொய்ம்புற ஒன்றுடையார்.
மோப்பக் குழையுடையார்.
மௌவலை ஒத்தவர்.
இன்னும் எத்தனை தமிழ் எழுத்துகளைக்கொண்டு என் எண்ணத்தைக் கவிதை வடிவில் தீட்டினாலும் அத்தனை செந்தமிழ் எழுத்துகளும் ஆசிரியர் முன் அடிமை. அப்பப்பா!!!! ஒன்றா! இரண்டா!!!...நம் ஆசிரியர்கள் உயிராய்,மெய்யாய்,உயிர்மெய்யாய்,ஆய்தமாய் இருந்து..ஆணிவேராக, அகிலத்தை தமிழ் எழுத்தாய் ஆள்கிறார்கள்..இத்தினத்தன்று ஆசிரியர் பணியை ஏற்று அர்ப்பணிக்கும் அனைத்து ஆசிரிய உள்ளங்களுக்கும் மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.






  

Translate