Search This Blog
Wednesday, September 14, 2016
Monday, September 5, 2016
நாங்களும் - நீங்களும்.
நாங்களும்
- நீங்களும்.
ஆசிரியரே,
நாங்கள் காகிதம் என்றால்
நீங்கள் எழுதுகோல்
நாங்கள் உடம்பு என்றால்
நீங்கள் உயிர்….
நாங்கள் பிம்பம் என்றால்
நீங்கள் கண்ணாடி
நாங்கள் ஆடை என்றால்
நீங்கள் நூல்
நாங்கள் பூ என்றால்
நீங்கள் மணம்
நாங்கள் கோவில் என்றால்
நீங்கள் தெய்வம்
நாங்கள் முடிவு என்றால்
நீங்கள் துவக்கம்
நாங்கள் கவிதை என்றால்
நீங்கள் உவமை
நாங்கள் வேர் என்றால்
நீங்கள் விழுது
நாங்கள் நண்பர்கள் என்றால்
நீங்கள் நட்பு
நாங்கள் அலை என்றால்
நீங்கள் கடல்
நாங்கள் நட்சத்திரங்கள்
என்றால்
நீங்கள் வானம்
நாங்கள் விழி என்றால
நீங்கள் ஒளி
நாங்கள் காற்றாடி என்றால்
நீங்கள் காற்று
மொத்தத்தில் எங்களுக்கு இயற்கை
தந்தவரம்! அப்படிப்பட்ட
நீங்களும் நாங்களும் இணைந்து வியத்தகு இந்தியாவை உருவாக்குவோம்!!!!!
ஆசிரியர் தினம் -2016
ஆசிரியர்
தினம் - 2016
கவிதை ஒரு கவிதை
– அது
என்னால் எழுதிய
சிறு கவிதை
தூக்கத்தில் வருவது
கனவல்ல…..
துள்ளி எழ நினைப்பதே
கனவு!!!!
நம்மை விட்டுப்
பிரிந்த கனவை
நம்முடன் தொடர்ந்து
வர
நினைப்பவர் நம்
ஆசிரியர்
நினைக்க நினைக்க
வருவது கவிதை
நிலை பெறச் செய்வதும்
கவிதை
நிலைத்தப் பின் வருவது சரிதம்
சரிதமே ஒருவரின்
சகாப்தம்!!!!!
சரிதம் என்பது
வெறும் எழுத்தல்ல – அது
வாழ்க்கை வரலாற்றின்
தொடக்கம் – அவ்
வாழ்க்கை வரலாற்றை
உருவாக்கும்
நாயகரே நம் ஆசிரியர்.!!!!
என்னவளே!!
உம் பிரமிக்க வைக்கும் பணியைக் கண்டு
நாங்கள் வியக்கிறோம்…உங்களால்
எங்கள் வாழ்க்கை மலர்கிறது ஒரு பூவைப்போல்
எங்களை மலர வைக்கும் பூவே நீங்களன்றோ!!!!
உம்மை நாங்கள் எம்முடன் சூட – உங்களிடம்
அனுமதி பெற……
நாங்கள்
மாணவர்களாய் வந்துள்ளோம்
வந்தவர்களுக்கு கல்வி என்னும் பூவை - மேலும்
அள்ளித் தர விரும்புகிறோம்…
வாசமுள்ள மல்லியை
வாசமில்லா நாருடன் சேர்த்து
நாருக்கும் வாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுபோல்
கல்வியோடு கரையையும் சேர, வழிகாட்டும்
கலங்கரை விளக்கமாய் இருந்தும்
கல்வி
மழையாய் இருந்தும்
கல்வி என்னும் அமுதத்தை வழங்கும் ஆசிரியர்களுக்கு
என் கவிதை
சமர்ப்பணம்….
வாழ்க ஆசிரியர்…!!!!!...வளர்க அவர்கள் பணி!!!!!
Subscribe to:
Posts (Atom)