Search This Blog

Thursday, November 14, 2013

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்

நம் நல்லுலகின் நவமணிகளாம் – நன் 
            நாணயத்தின் மணிகளாம் 
நித்திய கல்யாணிகளாம் – என்றும்
            நீங்கா நினைவலைகளாம்
நுண்ணிய அறிவுடையவர்களாம் – பற்பல
           நூலோர் வழி நடப்பவர்களாம்
நெஞ்சில் நிறை மறைகளாம் - இவண்
            நேருவின் நேசகர்களாம்
நையப் புடைப்பவர்களாம் – கண்
            நொடிப் பொழுதில் உறைபவர்களாம் – நல்
நோக்கமே மேலோங்குபவர்களாம் - அழகிய
            நௌவிபோல் நடைபயில்பவர்களாம் – அவரே
என் நெஞ்சில் என்றும் நெடுந்தொகையாய் வீற்றிருக்கும்
                        எனதன்பு அருமைச்செல்வங்கள் …………………..
வாழ்த்துதல் ஒன்றே வசீகரமானது !!!
வணங்கி ஏற்றல் ஒன்றே உன்வசமானது !!!
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள். J J J

No comments:

Post a Comment

Translate