Search This Blog
Sunday, November 2, 2014
Friday, September 5, 2014
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
நாம் பயன்படுத்தும் நாணயத்திற்கு
இரு பக்கங்கள் இருப்பது போல்……..
உலக நிகழ்வுகளும்
இரு கோணத்தில் தான் இயங்குகிறது.
ஒன்று ஆம்,! இன்னொன்று இல்லை! என்பதே.
இதன் அடிப்படையில்……
ஒரு சாராரின் வாதம்……
கடவுள் உண்டு கல் வடிவிலே என்பர்…
ஒரு சாரார் கடவுள் இல்லை கண் எதிரிலே என்பர்.
இவ்விரண்டு பிரதிவாதிகளின் மத்தியில் இணையாதோர் கூறுவது
கடவுள் உண்டு அவர்தம் நம்பிக்கையின் உருவிலே என்று…
அந்நம்பிக்கையின் கதிரொளிப்பிழம்பே
கண்முன் காணும் நம் ஆசான் என்று…..உண்மையும் அதுவே…இன்று
ஆயிரம் திரு நாள் அகிலத்தில் அவதரித்தாலும்
நம் அடியார்களாகிய ஆசானுக்கு எடுக்கும் இவ்விழாவே
இறைவனுக்கு இன்பருளவைக்கும்
இனிய திரு நாளாகும்!!!
இப்பொன்னான பெருவிழாவில்
இன்று பெருமிதத்துடனும் …பிரமிப்பூட்டும் வகையில்
வகையறியா வர்ண ஜாலங்களை
தன்னிகரில்லா தவ மாணிக்கங்களை
மனமகிழ்ந்து மனவெழுந்து
மணிக்குரல் ஒலிக்கிறது
வாழ்க!!!!!!!!!!!! வாழ்க!!!!!!!!!!!! என்று
இவ்வாழ்த்து இன்றோடு நின்று விடாமல்
நித்தமும் ஜெயம் ஜெயமே என்று
என்றென்றும் எண்ணுமளவிற்கு
எழுச்சியின் உச்சம் கருணை, கனிவு,
கடின உழைப்பை மேற்கொள்ளும் நீரே
பொன்போல் போற்றும் பொற்பதமே.
குணமிக்கவன் குரு
குலம் விளங்க வைப்பவனும் குரு
குழந்தைகளின் குதூகலமே குரு
என்று என் எண்ணோட்டத்தை ஏணிப்படிகளாக்கலாம்.
அதற்கு இன்று ஒரு நாள் போதாதே!!!!
.ஆம்!!!.எம்முடன் பணிபுரியும் ஆசிரியப் பெருந்தகையீர்
நீவிர் நட்பின் நாயகியாய்…..
நற்பழக்கங்களைப் போதிப்பதில் நவரச நாயகிகளாய்….
முப்பாலைப் பயிற்றுவிக்கும் முப்பெரும் தேவிகளாய்…
கல்வியைப் போதிப்பதில் கணவான்களாய்த் திகழும்
தாங்களுக்கு என் தயை ஒன்றே
இன்று தந்தருளேன் நன்றே…..
குடும்பத்தில் நீட்சி பெற்றவனுக்கு
ஒரு சில உறவுகளால் மட்டுமே பெருமை. –ஆனால்
குழந்தைகளிடம் நீட்சி பெற்ற உங்களுக்கோ
ஓராயிரம் கோடியான குறும்புகளின்
உறவுகள் அல்லவா காத்திருக்கிறது…..!!!!
இவ்வுறவு எத்துறைக்கும் சாத்தியமற்றது…
நம் துறைக்கு மட்டுமே துணிச்சலானது.
துணிவுமிக்க இத்திரு நாளன்று
மாணவர்களிடம் ஒரு நல்ல நண்பனாக
வழிகாட்டியாக ………
கதா நாயகன் கதா நாயகியாக
ஞானத்தைப் போதிக்கும் தத்துவ ஞானியாக
நிமிர்ந்தால் பார்த்தால் நடந்தால்
என எல்லாவற்றிலும் மாணவர்பால் பட்ட
கண்ணாடிப்பிம்பம் போல்
ஒளிர் விடுவோம்
வருங்கால மாணவச் சந்ததிகளை சலிக்காமல்
சலனமின்றி உருவாக்குவோம்.
அன்பு என்ற பண்பை மாணவரிடம் போதிப்போம்.
அன்பில்லாதவன் தேவனை அறியான்.
தேவன் அன்பாகவே இருக்கிறார்.
கண்ணதாசன் கூறியது போல் …….
கருணையும் இரக்கமும் கொண்டுள்ள உள்ளந்தான்
கடவுள் வாழ்கின்ற இல்லம்.
இதுவே ஆசிரியரின் உள்ளம்...எனக்கூறி
ஆசிரியப் பணியே அறப்பணி!!!!!!!!
அதற்கு உன்னை அர்ப்பணி!!!!!!!!!!
நன்றி.
இவண்
ப.சித்ரகலா.
Tuesday, August 26, 2014
10ஆம் வகுப்பு CBSE மாணவச்செல்வங்களுக்கான உரை நூல் (எனது முதல் முயற்சி)
தமிழ் அன்னைக்கு வணக்கம்!!
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
ஆம்! நான் எடுத்த இச்செயலை நினைத்த மாட்டில்
முடித்து விட வேண்டும் என்ற திண்ணமும், ஆர்வமும் எனக்குள் துளிர் விடக் காரணம் மாணவச்செல்வங்கள் மேல்
நான் கொண்டிருக்கும் அபரிதமான அன்பும் அக்கரையுமே. எத்தனையோ உரை நூல் மாணவ மணிகளை நோக்கி
வலம் வந்தாலும் எமது CBSE மாணவச்செல்வங்களுக்கான உரை நூல் தேர்வின் அடிப்படையில் இல்லாதது எனக்குள் ஒரு பெருங்குறையாகவே
இருந்தது. இதனை நிவர்த்தி
செய்யும் பொருட்டு எழுந்ததே இந்நூல். இது மாணவர்களின் அறிவுப்பசிக்கு விருந்தாக்கும் என்று நம்புகிறேன்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
என்பதற்கேற்ப முயன்றுள்ளேன். இம்முயற்சியை மாணவக்கண்மணிகளாகிய நீங்கள்
முயன்று வெற்றியடைவது உங்கள் கையில்தான் உள்ளது.முழுமையான அலசல்களின்படி தேர்வை நோக்கியே
இந்நூலை அமைத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக!.
இந்நூல் உருவாவதற்கு முதல் காரணகர்த்தியாக
இருந்தவர் மதிப்பிற்குரிய பத்மா பப்ளிகேஷன் திரு. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது முதல்
நன்றி. அடுத்து, இவ்வாய்ப்பினை நல்கிய எம் பள்ளி முதல்வருக்கு
நன்றி. மேலும் எனது பெற்றோரின் ஆசிர்வாதம், கணவரின் கனிவு, தம்பிமார்களின் தயவு, சகோதரிகளின் அரவணைப்பு, எனதருமைக் குழந்தைகளின் குதூகலப் புன்முறுவல், நட்பின் நேசம் இதனை மேலும் செய்யத்தூண்டியது. இது எனது முதல் முயற்சி. இதில் ஏதேனும் குறையிருப்பின் சுட்டிக்
காட்ட முயலுங்கள். முயல்கிறேன்
மீண்டும் எனது முதல்வனை வேண்டி குறைகளை நிறைவு செய்ய…………….
உங்கள் பேராதரவை எதிர்நோக்கும்………
Sunday, August 24, 2014
Sunday, August 17, 2014
குழந்தைப் பாடல்கள்
மரம் நடுவோம்
மரம் நடுவோம் மரம் நடுவோம்
மழலைகள் நாமே
விண்ணின் துளி மண்ணில் விழ
மரம் நடுவோமே
தூய காற்று சுவாசிக்கவும்
துவண்டிடாமல் வாழ்வதற்கும்
மரம் நடுவோம் மரம் நடுவோம்
மழலைகள் நாமே
சுற்றுச்சூழலைப் பேணவும்
சுகாதாரமாய் வாழவும்
மரம் நடுவோம் மரம் நடுவோம்
மழலைகள் நாமே
விண்ணின் துளி மண்ணில் விழ
மரம் நடுவோமே…..
கல்வி
கல்வி என்ற கற்கண்டை
கனிவாய் நீயும் பயில்வாயே
வாழ்வின் வழிகாட்டி கல்வியை
கசடறக் கற்க முனைவாயே
கல்வி என்ற கலங்கரையை
கரை சேரக் கற்பாயே
பண்பை உயர்த்தும் கல்வியை – நல்ல
பாரதத்தில் சேர்ப்பாயே
வாழ்வில் முடிவில்லை கல்வியே
நம்மை வளம் சேர்க்கும் கல்வியே
என்றென்றும் வேண்டும் கல்வியே
என் ஒளி விளக்கே கல்வியே…..
Subscribe to:
Posts (Atom)