Search This Blog

Wednesday, December 5, 2012

காலம்



 ‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது‘ (Time waits for no man) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘காலம் பொன்னானதுஎன்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இவற்றிலிருந்து என்ன தெரிகின்றது? காலம் என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியாமையாதது. எந்தக்காலத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதனை அந்தக் காலத்திலேயே செய்ய வேண்டும். காலத்தை வீணாக்கக்கூடாது; அது பொன்போன்றது; காலத்தின் அருமை தெரிந்து பயன்படுத்த வேண்டும், அதனையும் உரிய பருவம் அறிந்து பயன்படுத்த வேண்டும். இவை போன்ற உண்மைகளைக் காலம் நமக்குக் கற்பிக்கின்றது.
எனவே, ஒவ்வொன்றையும் செய்வதற்கு உரிய காலம் என்று ஒன்று உண்டு. அவற்றை மனத்திற்கொண்டு செயல்பட்டால் நன்மை விளையும். இது இயற்கையின் தன்மை. நம் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவும்; வரலாற்று நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் இவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.
விவசாயியும் காலமும்
                     நிலத்தைப் பயிரிடும் விவசாயிகள் (Agriculturalist), பருவகாலத்தை அடிப்படையாகக்     கொண்டே     பயிரிடுகின்றனர். உழுது, விதைவிதைத்து, பயிரிட்டு, அறுவடை செய்வது வரையிலும் பருவகாலங்களே அடிப்படையாக அமைந்துள்ளன. காலத்தைக் கருத்தில் கொண்டு செய்யும் விவசாயி, தான் நினைத்த பலனைப் பெறுகிறான்.
எறும்புகள்     கூட,     மழைக்காலத்தை     மனத்திற்கொண்டு, வேனிற்காலத்தில் உணவுகளைச் சேமிக்கின்றன. இவ்வாறு பலநிலைகளில் உயிர்வாழ்வன, காலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப, செயல்பட்டுப் பயன்பெறுகின்றன. இயற்கையின் இந்த உண்மையினை,
ஞாலம் கருதினும் கைகூடும், காலம்
கருதி இடத்தால் செயின்
(குறள்: 484)
(ஞாலம் = உலகம், கருதினும் = கருதினாலும், செயின் = செய்தால்)
என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
    தான் செய்யவேண்டிய வினையைத் தகுந்த காலம் அறிந்து செய்யவேண்டும். அவ்வாறு செய்தால், உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் என்கிறார் வள்ளுவர்.
நெப்போலியனும் காலமும்
உலகம் முழுவதையும் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டுவர விரும்பியவன் நெப்போலியன் எனும் மாவீரன். ஆனால் அவன் உருசியாமீது படையெடுத்தபொழுது, காலத்தைக் கருத்தில் கொள்ளவில்லை, முழுமையான குளிர்காலத்தில் படையெடுத்துச் சென்றான். குளிரின் துன்பம் தாங்கிக்கொள்ள இயலாமல் பல படை வீரர்கள் இறந்தனர். நெப்போலியனால் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. உருசிய நாட்டைக் கைப்பற்ற இயலவில்லை. நெப்போலியன் காலம் கருதிச் செயல்பட்டிருப்பானேயானால் உருசிய நாட்டை எளிதில் கைப்பற்றி மேலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்றிருக்கலாம்.
காலம் கருதுதலும் கருதாமையும்
காலம் என்பது, மிகவும் இன்றியமையாதது; ஒருவனது வெற்றியும் தோல்வியும், அவன் காலம் கருதிச் செயல்படுவதைப் பொறுத்து அமையும் என்பது வள்ளுவர் கருத்து. இன்றைய நடைமுறை வாழ்க்கையிலும், பிறவற்றிலும், காலம் அறிந்து செயல்படுவோரின் வெற்றியையும், காலம்கருதாது செயல்படுவோரின் தோல்வியையும்,     நாள்தோறும்     பார்த்துவருகிறோம் அப்பொழுதெல்லாம் வள்ளுவரின் இந்தக்கருத்து நம் மனக்கண்முன் வருகிறது - மேலும் வந்து கொண்டிருக்கும். எனவே வள்ளுவர் இன்றல்ல என்றும் வாழ்வார்.
காலம்
காலம் முன்னைக்கு இப்ப ரொம்பதான் கெட்டுப் போச்சு”  சில வீடுகளில் வயதானவர் கள் பல சமயம் கூறும் பேச்சு இது. அவர்கள் தங்களின் இளமைக்கால வாழ்க்கை நிலைகளை இன்றுள்ள விலைவாசி, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற மக்களது மனநிலை, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் சுயநலம் போன்ற பலவற்றுடன் ஒப்பிட்டுச் சொல் கிறார்கள்அவர்களைப் பொறுத்தவரை, காலம் இன்னும் மோசமாகத்தான் போகும் என்ற கருத்தை மாற்றுவது கடினம்.
குடுகுடுப்பைக்காரர்கள்நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!” எனப்பல ஊர்களுக்கும் வரிசைக்கிரமாகச் சென்று பல விதமான தகவல்களைக் கூறிவருகின்றனர்இவர் களுக்கு எப்போது நல்ல காலம் பிறக்குமென்று தெரியவில்லை?
கால நேரம்
கால நேரம் பார்த்துச் செய்தால் வெற்றி எனக் கூறுவார்கள். அப்படியானால் காலம், நேரம் இரண்டும் ஒன்றா? வேறா? இரண்டும் வேறு வேறு தான். காலம் என்பது சரியான தருணம் (Proper Period) என்று வினைச் சொல்லாகப் பொருள் தரும்நேரம் என்பது பெயர்ச் சொல்லாக (Noun) நேரம் (Time) என்று பொருள் தரும்.
ஒரு நாளைக்கு 24 மணிநேரம் (24 Hours Time) என்று கூறுகிறோம். சமயோசிதமாய், சரியான காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் (TRAFFIC JAM) கடந்து சென்றதால் இரயில் ஏற முடிந்தது. இப்போது இரண்டுக்கும்  உள்ள வித்தியாசம் நன்கு புரிந்திருக்கும்.
காலம் அறிதல்
இங்கு நேர நிர்வாகத்தை (TIME MANAGEMENT) விட்டுவிட்டு சரியான தருணம் என்ற காலத்தை மட்டுமே பார்க்க உள்ளோம்திருவள்ளுவர் பொருட்பால் அரசியல் காலம் அறிதல் என்ற தலைப்பில் பத்து குறள் களைப் பாடி வைத்துள்ளார்.
விஞ்ஞானம்
உலகிலுள்ள பொருட்களைத் திட, திரவ வாயுப் பொருட்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவைகளிலுள்ள காந்தத்தின் வெளிப்பாடு அழுத்தம், சுவை, மணம், ஒளி, ஒலி என்ற தோற்றங்களாக வெளிப்படுவதைக் கணக் கிடும் நான்கு அளவுகளில் ஒன்று காலம். மற்ற மூன்றும் இடம், தூரம், வேகம் ஆகியன ஆகும்.
இங்கு காலம் என்பது ஒரு செயல் துவங்கி முடிவதற்கான அளவு (QUANTITY) என்ற பொருளில் உபயோகமாகிறது. நாம் பார்த்துக் கொண்டிருப்பது வேறு.
காலத்தின் சிறப்பு
பருவத்தே பயிர்செய், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் போன்றசொற்களை நாம் நன்கு அறிவோம். இவை காலம் என்றபொருளில் கூறுபவைநேரம் என்பது போனால் வராது(EVERY MINUTE COUNTS). ஆனால், சரியான காலத் துக்காக நேரத்தை விரயமாக்கி காத்துக் கொண்டிருக்க வேண்டும். ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு இதில் கொக்கு தனக்குத் தேவையான பெரிய மீன் வரும் வரையில் பொறுமையாய் காத்திருந்து சிறிய மீன்களையெல்லாம் விட்டுவிடுவது விளங்குகிறது.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
என்று வெகு எளிதாகத் திருவள்ளுவர் இக்குறளில் விளக்கியுள்ளார். தனது இரைக்காகக் காத்திருக்கும் கொக்கு, காலம் வாய்த்தவுடன் இரையைக் கொத்துவது போல, சரியான தருணத்தில் செயலைச் செய்து முடிக்க வேண்டும்இதுவே காலத்தின் சிறப்பு.
கார்கில் போன்ற பனி மூடிய இமய மலைப் பகுதிகளில் பணிபுரியும் நம்நாட்டு மானம் காக்கும் இராணுவ வீரர்கள் சரியான காலத்துக்காக காத்திருந்து எதிரிகளை அழிப் பதையும் இங்கு நினைவு கூறலாம்.
அடிப்படை
சரியான காலத்தை தேர்வு செய்வதற்கு சில அடிப்படைக் காரணிகள் உள்ளனஅவைகளை அகம் (உள்), புறம் (வெளி) என இரு பெரும் பிரிவுகளாய் பிரிக்கலாம்அகம் என்பது நம் மனம் மற்றும் உடல்நிலை என்று கூறலாம்புறம் என்பதை மற்ற புறச்சூழ்நிலைகள் அனைத்தும் என்று கூறலாம்காலம் என்பது இவ்விரண்டும் இணைந்த நிலையாகும்.
சமயோசித புத்தி (PRESENCE OF MIND)
நிதானத்துடன் அபாயத்தை வெல்லும் மனநிலை. ஸ்கூட்டரில் செல்கிறோம். நமக்கு முன் ஒரு கார் சென்று கொண்டிருக்கிறது. முந்திச் செல்ல நினைக்கிறீர்கள். தொலைவில் எதிரில் ஒரு பஸ் வருகிறது. பஸ், காருக்கு இடைப்பட்ட தூரம், இரண்டின் வேகம், உங்கள் ஸ்கூட்டரின் வேகம் இவைகளைக் கணித்து, ஒரு சில விநாடிகளில் முடிவெடுத்து, வேகமாய் காரை முந்திச் செல்கிறீர்கள் அல்லது முடியாது என வேகத்தைக் குறைத்து காரின் பின்னாலேயே சென்று பஸ் கடந்து சென்றபின் காரை முந்திச் செல்கிறீர்கள்.
இந்த இரண்டில் ஒன்றை உங்களது மனநிலை, முந்தைய அனுபவங்களின் அடிப் படையில் செய்கிறீர்கள் இதுதான் சமயோசித புத்தி எனக் கூறப்படுகிறது. இரவு இரயில் பயணத்துக்குத் தயாராகிறீர்கள். சாப்பிட நேரமில்லை. இரயில் இரவு 11 மணிக்கு புறப்படுகிறதுபிளாட்பாரத்தில் ஜுஸ் பாட்டில், பிரியாணி விற்பனை செய்கின்றனர்அந்நேரத்தில் பிரியாணி சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது; ஆனால், பசியைப் போக்க ஜீஸ் மட்டும் சாப்பிடலாம் என முடிவெடுத்துச் செயல்படுவது சமயோசித புத்தியாகும்.
காலம் நமக்காக காத்திருப்பதில்லை: நாம் தான் காலத்துக்காக (சரியான தருணத்துக்காக) காத்திருக்க வேண்டும். இதுவே சாணக்கிய சூத்திரம்.
கோட்டான் பலமுள்ள பறவை; காகம் அதனுடன் ஒப்பிடும் போது பலம் குறைந்த பறவைஆனால் காகம் கோட்டானை வென்று விடுகிறதுஎப்படி ? பகல் கோட்டானுக்கு கண்பார்வை தெரியாதுஅதனால் சுலபமாகத் தாக்கி வெல்கிறது. மனிதனுடன் ஒப்பிடும் போது ஆடு சாதுவான பிராணி. அதை ஒரு பையன் கல்லால் அடிக்கிறான். திடீரென அதற்கு கோபம் வந்துவிடுகிறதுபையனைப் பார்த்து கொண்டே பின்னோக்கி நகருகிறது. பையனுக்கோ சந்தோஷம்திடீரென பின்னால் நகர்ந்த ஆடு, முன்னோக்கி வேகமாய் வந்து எதிர் பாராதவாறு பையனை முட்டித் தள்ளுகிறது.
இந்த இரு சம்பவங்களிலும் பகைவர் களுடன்   சண்டையிடுவதற்கான   சரியான தருணத்தை இந்த உயிரினங்கள் போல அரசர்கள் காலமறிந்து செய்தால் வெற்றி எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
பஞ்சு  உப்பு
நான் உப்பு விற்கச் சென்றேன்மழை யாகப் பொழிந்தது; பஞ்சு விற்கச் சென்றேன்; காற்றாக அடித்ததுஎன்பது நாம் அறிந்த வாக்கியம். மழைக் காலத்தில் உப்பு விற்கலாம் என்று எடுத்த முடிவு சரியானதா? அதே போல் காற்று வீசும் காலத்தில் பஞ்சு விற்கச் செல்ல எடுத்த முடிவும் சரியானதா? பாதிப்பு வரத்தானே செய்யும். தேவையான முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டால் பலன் கிடைக்கும்.
சரியான காலமறிந்து நாம் செயல் பட்டால் அது, நம்மிடமுள்ள செல்வத்தை நம்மிடமிருந்து பிரிந்து போகாமல் கட்டும் கயிறாகச் செயல்படும் என்பார் செந்நாப் புலவர்.
காலம் கெட்டுப் போச்சு
இதை சிறுவயதில் நம் ஆயா, பாட்டி அடிக்கடி சொல்லி நாம் வெளியே செல்லாமலிருக்க கையாண்ட தந்திரம்ஆனால் வளர்ந்து, படித்து வாழ்க்கையில் முன்னேறியுள்ள இன்றைய கால கட்டத்திலும் இது போல் நாம் நினைக்கக் கூடாது. “அருவினை என்ப உளவோஎன்பது குறள்தேவையான தகவல்கள், ஏற்பாடுகளுடன் சரியான காலத்தில் செயல்பட்டால் நம்மால் முடியாதது எதுவுமே இல்லை
ஞாலம் கருதினும் கைகூடும்.” இடத்திற் கேற்றவாறு காலமறிந்து செயல்பட்டால் இந்த உலகமே நமக்குத் தேவையென்றாலும் கட்டாயம் பெறமுடியும்.
நெப்போலியன்
நமக்குத் தெரியும் உலகை வெல்ல திட்ட மிட்டார். போரிட்டார்எங்கும் வெற்றி ஆனால் ரஷ்யாவைத் தாக்கிய போது காலமறிந்து செயல்படாததால் தோல்வியைத் தழுவினார்காரணம் குளிர், பனியில் இவரது வீரர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர்.
பில்கேட்ஸ் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தவர். பணம் ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்று செயல்படவில்லைதேவைக்கு போதும் என்ற உணர்வு வந்தவுடன் அறக் கட்டளை ஆரம்பித்து, உலகின் பல நாடுகளில் இன்று மருத்துவ உதவி என்ற வகையில் மிகப் பிரமாதமாய் செயல்பட்டு, முன்பைவிட சாதாரண மக்களிடமும் பிரபலமாகி வருகிறார். காரணம்; காலமறிந்து அவர்  செயல்பட்டது தான்.
குறிக்கோள்  தடைகள்
குறிக்கோளில்லாத வாழ்க்கை முடிவில்லாத பயணம் போன்றது.  உள்ளத்துப் பார்வை இருந்தால் தான் நமது குறிக்கோளை அடைய முடியும். குறிக்கோளை எண்ணும் போது எல்லாம் நமக்கு புத்துணர்ச்சியும், புதிய சக்தியும் வர வேண்டும்.
பள்ளிக்குழந்தைகளிடம் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் பரிசுப்பொருள் வாங்கித் தருவதாய் கூறிப்பாருங்கள்; தேர்வு முடிந்து மார்க் வரும் வரை இந்தப் பரிசு அவர்களிடம் நன்கு படிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை அணை யாமல் காப்பதுடன் மிக, விருப்பத்துடன் மகிழ்ச்சியைத் தரும்.
இதுபோல் சின்னச் சின்ன குறிக்கோள் களை இலக்காக வைத்து செயல்படவும், குறிக்கோள்களை நிர்ணயிக்கவும் பயிற்சி தர வேண்டும். அவைகளை அடைய தடைகள் எவையென்று மனதில் படுமாறு கூறவேண்டும்.   பயம், கோபம், பொறாமை, விரக்தி, வெறுப்பு போன்ற மனநிலைகள்தான் முக்கியமான சுயதடைகள். வெளித்தடைகளை நம் அறிவாற்ற லால் நமக்கு சாதகமாய் மாற்றிக் கொள்ள முடியும். நிலத்தில் இயல்பாகவே களைகள் உள்ளனவிதை முளைக்கும் போது களைகளும் முளைக்கத்தான் செய்யும். அதனை அப்புறப் படுத்துவது போல நம் உள்ளத்திலும் மனத் தடைகள் வரத்தான் செய்யும். இத்தடைகளை நீக்கி விட்டாலே மகிழ்ச்சிதான்; தொடர்ந்து வெற்றிதான்.
ஆடிப்பட்டம் தேடி விதை
இது விவசாயிகளின் பொன்மொழிமழை இயற்கை வளங்களின் அடிப்படையில் செயல்பட்டால் பலன் மகிழ்ச்சி தரும்என்பதை இதனால் உணர முடியும். ராஜா தேசிங்கு சிறுவனாக இருந்த போது எவராலும் அடக்க முடியாத முரட்டுக் குதிரையை மிகவும் சுலபமாக அடக்கினார் எனப் படித்திருக்கிறோம்.
மற்றவர்கள் வரும்போது, அந்தக் குதிரை தன் நிழலைப்பார்ப்பது போல சூரிய வெளிச்சம் அதன் முகத்தில் படாமல் நிறுத்தினார்கள் அதனால் நிழலைப் பார்த்து பயந்த குதிரை வேகம் கொண்டு வந்தவர்களைத் தள்ளி விட்டு ஓடியதுஇதை அறிந்த தேசிங்கு குதிரையிடம் சென்றவுடனேயே அதனைத் திருப்பி அதன் முகம் சூரியனைப் பார்த்திருக்குமாறு செய்தார்நிழல் தெரியாததால் அமைதியாக இருந்த குதிரை மீது தாவி ஏறினார். தன் மீது ஒருவன் ஏறியதால் வெகுண்டு ஓடிய குதிரையின் மீது நன்றாகப் படுத்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ஓடிய குதிரை களைத்து நின்றது. அடக்கி வென்றார் தேசிங்கு. இதை நினைவில் கொண்டால் நம் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்கான சூழலை இது உருவாக்கும்.
பணிதல்
காற்றடிக்கும் போது நேராக நிற்கும் மரங்கள் வீழ்ந்து விடும். ஆனால் காற்றின் வேகத்துக்கு ஏற்ப சிறிது வளைந்து கொடுத்த பின் தலை நிமிரும் (நாணல்) மூங்கில் கீழே விழாது. அதேபோல் நல்ல காரியங்கள் செய்யும் போது எதிர்வரும் தடைகளை நீக்க நம் மனோ சக்தியே நமக்கு வழிகாட்டும். லஞ்சப்பணமாக வாங்கிய ரூ 1000 (50 ரூபாய் நோட்டுக்கள் 20)  போலீசாரைக் கண்டவுடனே வாயிலிட்டு, கழுதை போல மென்று தின்ன முயன்ற மின் வாரியப் பொறியாளர் போல் செயல்படக் கூடாதுஅவரது அடிப்படை நோக்கமும், அதற் கான செயலுமே தவறானது. அதன் அடிப் படையில் அவர் செய்த தவறான செயலால் நாடு முழுவதும் அவருக்கும் அவரது குடும்பத் தாருக்கும் பெரும் தலைகுனிவு தான் மிச்சம். அவருக்கு சம்பளம் போதாமலா லஞ்சம் பெற்றார்லஞ்சம் வாங்குவது பிறப்புரிமை என எண்ணிச் செயல்படும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இவரது செயல் சரியான நேரத்தில் செய்தது (TIMELY) எனக்கூற முடியாது.
நடந்து செல்லும் ஒருவரைத் தொடர்ந்து நாய் ஒன்று வேகமாக ஓடுகின்றது.   நீங்கள் சரியான சமயத்தில் அதன்மீது கல்லெறிந்து விரட்டி விடுகிறீர்கள்.   அதனால், அவர் நாய்க் கடியில் இருந்து தப்பிவிட்டார். இதுதான் சரியான நேரத்தில் செய்த செயல்.
சிலரை பச்சோந்தி (TIMELY SERVER) என்று கூறுவோம்தனது கொள்கை, குணங் களை காலத்துக்கேற்றவாறு மாற்றிக் கொண்டது போல் நடிப்பவர்களைச் சொல்லும் வார்த்தை இதுஇவர்கள் நடிகர்கள்.
காலம் என்பது என்றும் நிலைத்திருப்பதுநாம் தான் இடையில் பிறந்து, வாழ்ந்து, இறந்து விடுகிறோம்நல்ல காலமா, கெட்ட காலமா என்பது ஒவ்வொருவரும் செயலைச் செய்ய தேர்வு செய்த தருணம், நோக்கம், செயல்பட்ட விதம் போன்றவற்றால் தான் தீர்மானிக்க முடியும்.
நல்லது நினைக்கின்; நல்லதே நடக்கும். வெற்றியாளராக திட்டமிட்டு செயல்பட்டால் நிச்சயம் வெற்றியாளராக முடியும். ஏற்கனவே நம் அனைவருக்கும் நல்ல காலம் பொறந்தாச்சு! சந்தோஷமாகச் செயல்படுங்கள்.
வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment

Translate