Search This Blog

Monday, October 1, 2018

சுதந்திரக் காற்று உன் சுவாசத்திலும் வீசும்.




இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.

 நமது நாடு சுதந்திரம் அடைந்து ண்டுகள் பல கடந்து விட்டன.  அனைவருக்குமே ஆகஸ்ட் 15 ம்  தேதி விடுதலை நாள்.அதனால் ஆனந்தப் பள்ளு பாடுவதற்கேற்ற நாளாகி விட்டது. விடுதலை விழாக்களின் கொண்டாட்ட ஆரவாரங்களுக்கிடையிலே இந்த மண்ணில் வீசும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் தமிழனாக பிறந்த நமக்கு,  நாமே எத்தகைய வேதனைகளின் தொகுப்பாக இருக்கிறோம் என்பதை, இங்கே நம்மில் எந்தனை பேர் எண்ணிப் பார்க்கத் துணிகிறோம். ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பாடமாக இருக்கும்இருக்க வேண்டும் என்பதால். இன்று என்னால் முடிந்த சுதந்திரக் காற்றை சுழல வைக்க என்ன செய்ய காத்திருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்? எதனைச் செயல்படுத்த வேண்டும் என்பதே இச்சுதந்திர நன்னாளின் என் முகவுரை.
கண்ணீரும் செந்நீரும் ஊற்றி
உடல் உயிர் உரமாக்கி வளர்த்தோம் இது
விடுதலையின் விருட்சம்.
ஓங்கியே வளர்ந்தது ஒப்பற்ற விருட்சம்
கிளைகள் பரந்தன பூக்களும் மலர்ந்தன
காயாகிக் கனிதந்த காலத்தோடு வாழ்ந்தும் கொண்டிருக்கிறோம். எனக்கு இந்த நாள் கொடுத்த மரியாதை,
எல்லா நாட்களிலும் கிடைக்காதா? - என்று ஏங்குகிறது. எனக்கு மட்டுமல்ல..ஒவ்வொரு தேசப்பற்று கொண்டுள்ளவனுக்கும் இது ஓங்கும்.
இந்த மண்ணில் பிறந்த அனைவருமே ஒரே விதமான உணவுதான் உண்ணுகிறோம்.. ஆனால், ஒருவன் சுதந்திர உணவை உண்ணுகிறான், மற்றொருவர் அரசாங்கத்திடம் பதவிக்காக கையேந்தி, வாய்பொத்தி பதவியைக்காப்பதிலே நீர் பாசியாக வாழ்கிறான். நீரிலே தோன்றி, அந்த நீரிலே வேர் பிடித்துக்கொண்டு நீரையே மறைத்து விட்டு, தன்னையே உயர்த்திக்காட்டும் நீர்பாசியைப் போலசில மனிதர்களும் இந்த மண்ணிலே வாழத்தான் செய்கிறார்கள்
இந்த பூமி உனக்கு கொடுத்ததை
உன்னால் உணர முடியாவிட்டால் - இந்த
பூமிக்கு நீ பாரம்
இந்த சுதந்திரத்தால் இந்திய சமுதாயம் அடைந்த நண்மை என்ன? சுதந்திரத்தை நாம் விரும்பிதான் அடைந்தோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அப்படியிருக்கையில்,
செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை
ஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா!
முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்?

பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், வாகனநெரிசலின் போது, போக்குவரத்து விதிகளைமீறுபவர்கள், அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டுபவர்கள், கழிவுநீரை பொது இடங்களில் விடுபவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், வேலை நேரத்தில் தங்கள் கடமையை செய்யாதவர்கள் என்று,"சுதந்திரத்தைக் கையில்' எடுத்துக் கொண்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.நாடு வல்லரசாக வேண்டும், பொது இடங்கள் "அமெரிக்கா' போன்று இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களுடைய கடமையைமுழுமையாக நிறைவேற்றுகிறோமா என்று ஒருநிமிடம் யோசிக்கலாம்.
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
சாலைகளில்...: பலர் சரியான தடத்தில்தான் செல்கிறோமா என்பதைக்கூட கவனிப்பதில்லை. உரிய இடத்தில் "யூ டர்ன்' செய்ய பலருக்கு சோம்பேறித்தனம். குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் செல்வதில்லை. சிவப்பு எரியும் போதுநிற்பதில்லை. மஞ்சள் விளக்கு எரியும் போதே சென்று விடுவது.பலர் இண்டிகேட்டரை பயன்படுத்துவதே இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்கள் பயன்படுத்துபவர்களையே "குற்றவாளிகள்' போல் பார்ப்பது. இரவில் முறையாக ஹெட்லைட் பயன்படுத்தாமல் செல்வது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது என்று சாலைப் பயணத்தை மனவேதனைப்படுத்தும் விஷயங்களாக மாற்றியிருக்கிறோம். அதிலிருந்து மாற வேண்டும்.சாலையில் நடந்து செல்லும் போது கூட, மொபைல் பேசக்கூடாது. அது பெரிய ஆபத்தில் முடியும். அதேபோல் சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்வதுஅப்பகுதியை நோய்க்கிருமிகளின் கிடங்காகமாற்றுவதோடு, அதன் வழியே சென்றுவரும்பயணிகளுக்கு "இலவசமாக' அந்த இடம் நோய்களை வழங்கத் தொடங்கிவிடும். இவ்வாறு,
சமுதாயம் என்பது ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருப்பது. மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலை இப்போது உருவாகி வருகிறது என்றே கூற முடியும். பஸ், ரயில், விமானப் பயணங்கள் சில நேரங்களில் நம்பும்படியாக இல்லை. நாம் நமது நாட்டின் தலைசிறந்த தலைவர்கள் மற்றும் அவர்கள் நடந்த வழி ஆகியவற்றை பின்பற்றி நமது நல் ஒழுக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இன்னொரு பிரச்னை, வரிசையை தவிர்ப்பது. மேலைநாடுகளில் பொதுவாக, நான்கு பேர் கூடினால் கூட, அவர்களாக வரிசை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு கோயில் திருவிழா அல்லது பஸ் ஸ்டாண்டில் உள்ள கூட்டத்தினருக்கு வரிசை அமைக்க போலீசார்வரவேண்டியிருக்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில், வரிசை என்பது மிக முக்கியம். இல்லாவிட்டால்,முதலில் வந்தவர் கடைசியில் கூட அவருக்குரியதை பெற முடியாமல் போய்விடும். வரிசையில் செல்வோருக்கு இடையில் புகுந்துவிடுவது.வரிசையில் தெரிந்தவர் இருந்தால் அவர் தலையில் தனது சுமையைக் கட்டுவது
வயதானோர், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இருக்கை மற்றும் வரிசையில் இடம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
வர்த்தகத்தில்... : சரியான பொருளுக்கு உரிய விலை நிர்ணயித்துள்ளோமா?. பொருள் தரமானதுதானா? உபயோகிப்பாளரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறோமா? விற்பனையாகும் பொருள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுதானா? என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.இந்த நாட்டின் சுதந்திரம் நமக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான் என்ற உணர்வு ஏற்பட்டால்தான் உண்மையான சுதந்திரத்தின் சுவாசத்தை எல்லோரும் அனுபவிக்கமுடியும்.
ஒருவன் அடிமை என்றால் அதற்கு அவனே பொறுப்பாளி. அடிமையில்லை என்று உறுதி செய்து கொண்டால், அந்தக் கணமே சுதந்திர மகான் ஆகிவிடுவான்..இது தான் உண்மை நிலையென உணர்வோம்.
"நான் பெரிது நீ பெரிது அல்ல
நம் நாடே பெரிதேன்றான்" பெரியோன்
நாமோ இன்றும் யார் பெரிது
என்றே நிற்கின்றோம்.
சுயநலத்தை,ஆணவத்தை
சற்றே ஒதுக்கிவிட்டு எழுந்திருங்கள்.


கண்டிப்பாக சுதந்திரக் காற்று உன் சுவாசத்திலும் வீசும்.





13 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கருநாடகம்,



13  ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கருநாடகம்,



பெங்களூரு தமிழ்ச்சங்கம், அலசூர், பெங்களூர் -42.
விழாவின் நோக்கம்:
v  மொழித்திறன்களின் பயன்பாட்டை அறிதல்.
v  மொழித்திறன்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுதலை அறிதல்.
v  நம் தாய்மொழியை பிற மாநிலத்தில் பயன்படுத்தும் உத்திகள்.
v  மொழிக்கு ஆற்றும் பணிகள்
v  பிழையின்றி பேச எழுத முன்னேற்பாடான நடவடிக்கைகள்.
v  பிற நாட்டறிஞர்கள், எவ்வாறு மொழிக்கூறுகளையும் திறன்களையும் கற்றல் கற்பித்தலில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிதல்.
நிகழ்வு:
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சார்பில், 13 ஆவது உலகத் தமிழ் மாநாடு 16.06.2018 சனிக்கிழமை அன்று காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை பெங்களூரில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில், பல்வேறு தலைப்பின் கீழ், ஆய்வரங்கம், கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில், ஆய்வரங்கத்தில், நால்வகைத் திறன்களும் கற்பித்தல் உத்திகளும் என்ற தலைப்பில் உரையாடினேன்.
ஆய்வரங்கத்தின் மூலம்  நான் வெளிப்படுத்திய கருத்துகள், நால்வகைத் திறன்களான, கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறனை  நிலை வாரியாக, வளர்க்கும் கற்றல் – கற்பித்தல் உத்திகளை எடுத்து மொழிந்தேன். இதன் சார்பாக, ஆய்வுக்கட்டுரைக்கான, ஆய்வறிக்கையும் சம்ர்ப்பித்தேன்.
இறுதியாக, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் பண்பாட்டு மலர் வெளியிட்டு, பரிசும், மலரும் வழங்கப்பட்டது.

கற்பித்தலில்புதுமைகள்


கற்பித்தலில்புதுமைகள்
(வகுப்பு – VII)
செய்யுள்

1.    திருக்குறள், ​போன்ற நீதி நூல்க​ளைக் கற்பிக்கும் ​போது மாணவர்களை​யே கலந்து​ரையாடச் ​​செய்து, ஒவ்​வொருவரின்     நடத்தை முறைக​ளை, மாணவர்க​ளைக் ​கொண்​டே, அவர்தம்    நடத்தையில் மாற்றம் ​கொள்ளச் ​செய்தல்.

2.    ​செய்யு​ளை மனனம் ​செய்ய இ​சையுடன் பாடக் கற்பித்தலின் மூலம் எளி​மையாக மனனம் ​செய்யும் திற​னைப் ​பெறுகின்றனர்.

3.    சில ​செய்யுளுக்கு மாணவர்களுக்குத் ​தெரிந்த இ​சையின் அடிப்படையில் பாடச் ​செய்வதன் மூலம் இ​சையின் ​மேல் ஆர்வத்தைத் தூண்டுதல் தா​னே பாடல் இயற்றும் திற​னையும் வளர்த்தல்.

4.    ந​டைமு​றை வாழ்​வை ஒப்பிட்டுக் கூறுதல். எடுத்துக்காட்டாக, நீ மன்னனாக இருந்தால் நாட்டு மக்களுக்கு என்ன ​​செய்வாய்? ஒரு நாள் மன்னனாக நடிக்கச் ​செய்தல்.

5.    ​பொருள் பிரித்து கற்பிப்பதால் ​மொழி அறி​வைப் ​பெற்று தனித்துவத்தைக் கற்றல், (.கா) கரும்பல​கையில் ஏ​தேனும் ஒரு ​சொற்​றொட​ரை எழுதி அத​னை மற்​றொரு மாணவ​னைக் ​கொண்டு ​பொருள் பிரித்து படிக்க ​வைத்தல். அம்மாணவனுக்கு நட்சத்திரம், சிரிக்கும் முகம் வ​ரைந்து உற்சாகப்படுத்துதல்.

உ​ரைந​டை:

1.    ஒப்பீட்டு மு​றையில் கற்பித்தல்,
     .கா. அறிவியல் அறிஞ​ரைப் பற்றிய ​செய்தியாக  இருந்தால், ​வேறு அறிவியல் அறிஞ​ரைப் பற்றியும், அவரு​டைய வாழ்க்​கை முறைப்பற்றியும் கூறும் ​போது மாணவர்கள் பிற அறிஞர்க​ளையும், பிறநாட்டு கலாச்சாரம், பண்பாட்டு மு​றைக​ளையும் அறிந்து ​கொள்கின்றனர்.

2.    நாடகப்பாங்கு ​கொண்டு கற்பிக்கும் ​போது மாணவர்க​ளை, ஏ​தேனும் ஒரு கதாப்பாத்திரத்​தை ஏற்று நடிக்கச் ​சொல்லும் ​போதும் அக்கதாபாத்திரத்தின் தன்​மை​யை முழு​மையாக ஏற்றுக் ​கொள்வதால் இங்கு கற்றல் எளி​மைய​டைகிறது.

3.    மாணவரி​டை​யே தனித்துவத்​தை வளர்த்தல்​ ​பொருட்டு, மாணவர்கள் அறிந்திரா வண்ணம் ஏ​தேனும் ஒரு த​லைப்பி​னைக் ​கொடுத்தல். (.கா.) தலைவர்களின் படத்தி​னைக்காட்டி அவ​ரைப்பற்றிப் ​பேச ​செய்தல்.

4.    சுற்றுப்புறத்​தை அறியும் ஆற்ற​லை வளர்க்க வகுப்ப​றையி​லே​யே ​கோவில், சந்​தை, துணிக்க​டை, பூக்க​டை, மருத்துவம​னை இ​வை ​போன்ற அ​மைப்பி​னை ஏற்படுத்தி அறியச் ​செய்தல்.

5.    த​லைவர்கள், மத த​லைவர்கள் பற்றிக்கற்பிக்கும் ​போது ஏ​தேனும் ஒருவ​ரைப் ​போல​வே நடிக்கச் ​சொல்வதால், மாணவரி​டை​யே மதநல்லிணக்கத்​தையும், சமத்துவம், நற்பண்புக​ளையும் வளர்க்க முடிகிறதுஇதன் மூலம் ஆன்மீகம், மற்றும் கலாச்சாரமும் கடவுளைப்பற்றிய முழு  நம்பிக்​கை​யை வளர்த்தல்.

6.    உ​ரைந​டை​யை ஆசிரியர் வாசித்துக் காட்டுவதன் மூலம் மாணவர்களும் தங்கு த​டையின்றி ஏற்றத்தாழ்வுடன், நிறுத்தற்குறியோடு வாசிக்க அன்றாடம் வகுப்ப​றையில் ​செய்திதாள்கள் மூலமும், ​தொங்கு அட்​டைகள், மின்னட்​டைகள் மூலமும் பயிற்சி அளித்தல்.

7.    திரும்ப, திரும்ப  ​சொல்வதன் மூலமும், ​சொல்லி எழுதுதல் மூலமும் எழுதும் பயிற்சி​யை வகுப்ப​றையி​லே​யே ​செயல்படுத்துவதால் டண்ணகரம், தந்நகரம், , ற ​வேறுபாடு, ,,ழகர ​வேறுபாடுகளினால் ஏற்படும் பி​ழைகள் தவிர்க்கப்படுகின்றன. மாணவர்க​ளை​யே அந்தந்த எழுத்துகளாகப்பாவித்து மாறி, மாறி நிற்க​ வைத்தும், ​பேச ​வைத்தும் ​செயல்படுத்துதல்

இலக்கணம்:

1.    எழுத்துகள் கற்பிக்கும் ​போது மாணவர்க​ளை அவ்வெழுத்துகளாக நிற்கச் ​செய்து, இடம்மாறியும், ​சேர்த்து ​வைத்தும் ​கற்பிப்பதால் எளிமையாக கற்றுக்​கொள்ளும் திற​னைப் ​பெறுதல் ​சொல், ​சொற்றொடர், உருவாக்கவும் அறிகின்றனர்.

2.    வி​ளையாட்டு மு​றையின் மூலம், மனவ​ரைபடம் மூலமும் கற்பித்தலால் இலக்கணத்​தை எளி​மையாகக் கற்றுக் ​கொள்கின்றனர், மின்னட்​டைகள் மூலமும் கற்பித்தல் எழுத்துகள் பிறக்கும் முறையை ஒலி ​வேறுபாடு மற்றும் எழுத்துகள் பிறக்கும் இடம் புகைபடத்​தை காணப்பிப்பதன் மூலம் ஒவ்​வொரு எழுத்தும் எவ்வாறு பிறக்கின்றது என்று அறிகின்றனர் .

3.    ​சொற்களஞ்சியத்​தையும், ​​மொழி அறி​வையும் ​பெருக்க ஓ​​ரெழுத்து, ஈரெழுத்து, மூ​வெழுத்து ​சொற்க​ளை ஒருமாணவன் கூறமற்றமாணவர்கள் அதற்​கேற்ற ​வேறு ​சொற்க​ளைக்கூறுதல். பல ​சொற்களையும் ஒ​ரே ​பெட்டியில் ​போட்டு மாணவர்க​ளைக் ​கொண்டு பிரித்துஎடுக்கச் ​சொல்வதாலும், இவ்விருதிறன்களும் நன்கு வளர்கின்றன.

​​பேசுதல் திறன் புது​மைகள்:

1.    ​பேசுதல் திற​னை வளர்க்க பல க​தைப்புத்தகங்கள், சிறுவர் இதழ்கள், மற்றும் கருத்தரங்கு கலந்து​ரையாடல் மு​றைக​ளையும் மாணவர்களிடை​யே வளர்த்தல். இவற்​றை மாணவர்க​ளைக் ​கொண்டே அரங்​கேற்றுதல். இதன்மூலம் ​பேச்சுத்திறனும், சுயசிந்தனையும் வளர்கிறது. து​ணைப்பாடத்​தை மனனம் ​செய்ய இம்மு​றை உதவுகிறது.

2.    க​தை​யைப் புரிந்து தா​னே எழுதுவதற்கு க​தைத் ​தொடர்பான காணொலிக் காட்சி​யையும் பயன்படுத்துவதன் மூலம் எளிமையாகப்புரிந்து ​கொள்கின்றனர்.

3.    மாணவர்களி​டை​யே ​பேசும் ​போது ஏற்படுகின்ற மயங்கொலிப்பிழைகள் இம்மு​றையில் தவிர்க்கப்படுகிறது
     எடுத்துக்காட்டாக: ‘ண்ணகரம், ‘ன்னகரம், ,, ள ​வேறுபாடு இவற்​றை எளி​மையாக பி​ழைதிருத்திக்​கொள்கின்றனர்.
     ‘ண்வரும் இடத்தில் எல்லாம் வர்க்கம் மட்டு​மே வரும்.
     .கா. 1. மண்டபம்தண்டு
           2. ​தென்றல்குன்று
           3. கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி                        விழுந்தான்.
           4. யார் தச்ச சட்டை  எங்க தாத்தா தச்ச சட்டை
     இவ்வ​கைத் ​தொடர்க​ளை பல மு​றை கூறச்​சொல்வதன் மூலம் நன்கு நாபிறழ் பயிற்சி ​பெறுகின்றனர் 


படித்தல் திறன்:- புது​மைகள்:-
1.    படித்தல் திற​னை வளர்க்க நாள்​தோறும் ஒவ்​வொரு மாணவராக ​செய்தித்தாள் வாசிக்கும் பண்​பை வளர்த்தல்.


2.    இதன் மூலம் ஒற்​றைக் ​கொம்பு, இரட்​டைக்​கொம்பு, ஒற்​றைக்​கொம்பு து​ணைக்கால் ​இரட்​டைக்​கொம்பு து​ணைக்கால், ​வேறுபாடு அறிந்து தகுந்த ஏற்ற, இறக்கத்​தோடும் நிறுத்தற்குறிக​ளோடும் படிக்கம் திறனைப் ​பெறுகின்றனர்ஒலிக்கும் மு​றை அறிவதால் குறில், ​நெடில் ​வேறுபாடும் அறிந்துக் ​​கொள்கின்றனர்இத​னை ஒரு மாணவ​னை குறில் ​சொல்​லைக் கூறச்​செய்து மற்​றொரு மாணவனை அதற்கு இ​ணையான ​நெடில் ​சொல்​லைக் கூறச்செய்தல் 


.கா:      1.    கல் கால்
                ம​லை மா​​லை
                படி பாடி

           2.    ​​கெ இஃது ஒற்​றைக் ​கொம்பு.
                ​கே இஃது இரட்​டைக் ​கொம்பு.
                க் என்பது ​மெய்​யெழுத்து ’ – என்பது உயி​ரெழுத்து
                இரண்டும் ​​சேரும் ​போத  ​​​கெ வரும் இது குறில் எழுத்து.
                க் உடன் ​சேரும் ​போத ​கே இது ​நெடில்.
           3.    க் + இரண்டும் ​சேர்ந்தால் ​கொ குறில் எழுத்து.
                க் + இரண்டும் ​சேர்ந்தால் ​கோ ​நெடில் எழுத்து.


தமிழ்த்துறை
வகுப்பு : 9 & 10                 கல்வியில் மாற்றம்
தமிழில் ஆர்வம் கொள்வதற்கும், பிழையின்றி பேச எழுத செய்வதற்கும், புதுமையான செயல்பாடுகள்
1.     தொடக்கப்பள்ளியில் ஒளி, ஒலி அமைப்பு முறை அவசியம் தேவை.
2.     விளையாட்டு முறையில் கல்வி கற்றல்.
ü குறிப்புகளைக் கொண்டு சரியான வார்த்தையைக் கண்டுபிடி.
.கா., அம்மா à அன்பு, பாசம், பிறப்பு
CVP Value – Intellectual Development
ü வினோதக் கதை உருவாக்குதல்
.கா., துண்டுச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கதைக் கரு மூலம் கதை ஓட்டத்தை நகர்த்துதல்
CVP Value – All the values based on the words in given sheet
ü வேண்டுவன, வேண்டாதன
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வேண்டுவன வேண்டாதன பற்றி 2 நிமிடங்கள் பேசுதல்
CVP Value – All the values based on the words in given sheet
ü தொடர்ச்சியான நினைவாற்றல்துணைப்பாடம் மற்றும் கதைகள்
குழுவிலிருக்கும் ஒருவன் கதையைத் தொடர, பின்னுள்ளவர்கள் அதனைத் தொடர்ந்து முழுவதுமாக அக்கதையை நினைவில் கூறுதல் வேண்டும்.
CVP Value – Mental Development
ü கடந்து போகும் கேள்விகள்செய்யுள் பொருளுணர்
ஆசிரியர் கொடுக்கும் ஒரு குறிப்பைப் பயன்படுத்தி கேள்விகளுக்கு ஒருவர் பின் ஒருவர் பதிலளிக்க வேண்டும்.
CVP Value – Intellectual Development
ü கேள்விகளும் கோடுகளும்வாய்மொழித் தேர்வு (இலக்கணம்)
9
வினாக்களை 9 மாணவ்ர்களிடம் கொடுத்து அவர்களின் சரியான விடைக்கேற்ப 3X3 கட்டங்களில் நேர்கோடு உருவாக்கி. அதிக நேர்கோடுகள் உருவாக்கிய அணியை வெற்றி பெற்றதாக அறிவித்தல்
CVP Value – Mental Development
ü பாட்டுடன் பாரம்பரிய நடனமாடுதல்
கும்மி, கோலாட்டம் மேலும் பல
CVP Value – Integrated Development
ü போக்குவரத்து விளக்கு – (எழுத்துத் தேர்வு)
கேள்விகள் : சிகப்பு-கடினம், மஞ்சள்-சிறிது கடினம், பச்சைஎளிது
தாயத்தில் வரும் எண்ணிற்கு ஏற்ப குழுவிற்கு விளக்கின் நிறம் நிறுவப்பட்டு, கேள்விகள் கொடுக்கப்படும்
CVP Value – Mental Development
ü உன் பின்னால்


.கா., முதுகிற்கு பின்னால் கையால் ஒரு எழுத்தை எழுதி அவ்வெழுத்தில் தொடங்கும் கடினமான இலக்கிய எழுத்தை மாணவன் கூறி அதற்கு விளக்கம் கூற வேண்டும்.
CVP Value – Mental Development

3.     தமிழ் வகுப்புகளில் கட்டாயம் தமிழில் உரையாடச் செய்தல்
4.     அடிப்படைத் தமிழை கற்றுக்கொடுக்க ஒளி, ஒலி முறையைப் பின்பற்றுதல்
.கா., குறில், நெடில் எழுத்துகளுக்கு ஒலி எழுப்புதல் (விலங்கு, பறவை)
ஓற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்புகள் அறிய மாதிரி வடிவத்தை அட்டையில் அமைத்தல்

          இது போன்ற பல ஆர்வமிக்க புதுமையான உத்திகளைக் கையாண்டு CVP- மாணவர்களுக்கு புகுத்தி, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உள்ள இடைவெளியை நீக்குதல்

Translate