Search This Blog

Monday, August 2, 2021

ஆண்டு இறுதித் தேர்வு – (2021)இலக்கணப் பயிற்சி வினாக்கள் இயல் – 2,தொகை நிலைத் தொடர்

ஆண்டு இறுதித் தேர்வு – (2021)இலக்கணப் பயிற்சி வினாக்கள் இயல் – 2,தொகை நிலைத் தொடர்  ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.  சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.  தொடர்களைத் 1. தொகைநிலைத் தொடர் - Elliptical Expressions, 2. தொகாநிலைத் தொடர் - Unlliptical Expressions என இரண்டாகப் பகுக்கலாம்  சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் ‘தொகை’ என்பர்  தொக்கு – தொகை – பொருள்? மறைந்து வருதல்  தொகை’ ஆறு வகைப்படும். அவை, 1. வேற்றுமைத் தொகை 2. வினைத் தொகை 3. பண்புத் தொகை 4. உவமைத் தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித் தொகை  வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும்.  ‘நூல் படித்தான்’ என்னும் தொடர்,____ இதில் மறைந்து வந்துள்ள உருபு __ஐ- 2-ம் வே.உருபு  நூலைப் படித்தான்’என்பது 2-ம் வே.உருபு வெளிப்படை  ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு  தலை வணங்கினான்’ என்பது மூன்றாம் வே.தொகை  ‘தலையால் வணங்கினான்’மூன்றாம் வேற்றுமை தொகா நிலைத் தொடர்(ஆல்)  மூன்றாம் வேற்றுமை உருபுகள் __ ஆல்,ஆன்,ஒடு,ஓடு  மங்கை மகள்’ என்பது’ – நான்காம் வே. தொகை  மங்கைக்கு மகள் என்பது ___ நான் காம் வே.விரி(தொகா)  நான்காம் வேற்றுமை உருபு ___கு  ‘நாடு நீங்கினான்’ என்பது – 5-ம் வே,தொகை  ‘நாட்டின் நீங்கினான் –ஐந்தாம் வே.தொகா நிலைத்தொடர்(இல்,இன்)  ஐந்தாம் வேற்றுமை உருபுகள் –இல்,இன்  வேலன் சட்டை என்பது __ ஆறாம் வே.தொகை  வேலனது சட்டை என்பது __ ஆறாம் வே.தொகா நிலைத் தொடர்  ஆறாம் வேற்றுமை உருபு __ அது  மரக்கிளி என்பது ___ ஏழாம் வே.தொகை  மரத்தின் கண் கிளி என்பது __ ஏழாம் வே.தொகா நிலை.தொடர்  ஏழாம் வேற்றுமை உருபு __ கண்  முதல் வேற்றுமையின் வேறுபெயர் __ எழுவாய் வே.  எட்டாம் வேற்றுமையின் வேறுபெயர் __-விளி வேற்றுமை(அழைத்தல்)  வேற்றுமை என்பது ____ பொருளை வேறுபடுத்த வருவதாகும்.பெயர்ச்சொல்லின்  முதல் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ____ தொடர்கள் ஆகும். தொகா நிலைத்தொடர்கள்  வளைக்கை என்பது ___ வளையை உடைய கை(2-ம் வே,உருபும் பயன் உடன் தொ.தொகை  தொகை நிலைத்தொடரில் வராத இரு வேற்றுமைகள் ___ எழுவாய்(முதல்) எட்டாம்  காலம் காட்டும் இடைநிலை மறைந்து வருவது வினைத்தொகை. இவ்வாறு, காலம் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.  ‘குடி நீர்’சேர்மதி, ஓங்கு நீர், கொய்மலர்,திருந்துமொழி என்னும் தொடர். - வினைத்தொகை  குடித்த நீர், குடிக்கும் நீர், குடிக்கின்ற நீர் என முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் தந்து காலம் காட்டும் இடை நிலைகள் மறைந்து வினை தொக்கி நிற்பது ___ வினைத்தொகை  அலைகடல், பாய்புலி, உண்கலம், ஆடுகொடி, ஊறுகாய்.. வினைத்தொகை  ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை  நிறத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புப்பெயர்கள் பசுமை,நீலம்,வெண்மை  குணத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புச் சொற்கள்: நன்மை, தீமை,கொடுமை,பொறாமை.  சுவையைக்குறிக்கும் சொற்கள்: காரம்,புளிப்பு,கசப்பு  வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்: சதுரம்,வட்டம்,நாற்கரம்  பண்புப்பெயர்கள், நிறம்,சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும்.  பண்பை விளக்கும் உருபு மறைந்து (தொக்கு) வருவது பண்புத் தொகை.  செந்தாமரை’ என்பது ‘செம்மையாகிய தாமரை’ என விரியும். இடையில், ‘மை’ என்னும் பண்புப் பெயர் விகுதியும் ‘ஆகிய’,ஆன என்னும் பண்பு உருபும் மறைந்து வருவது பண்புத்தொகை  வெண்ணிலவு, இன்சுவை, வட்டக்கல்,உவர் நீர்,முத்தமிழ்,வட்டப்பாறை, தொன்மக்கள், பழந்தமிழ். - பண்புத்தொகை  உவமானம் உவமேயங்களுக்கு இடையில் உவம உருபு மறைந்து வருவது __ உவமைத்தொகை  தேன்மொழி’ என்பது உவமைத்தொகை  ‘தேன்போன்ற மொழி’ என விரிவது ___ விரி உவமை  உவமானம் உவமேயங்களுக்கு இடையில், ‘போலும்’புரைய,அன்ன,இன்ன,மான,கடுப்ப போன்ற _____மறைந்து வருவது உவமைத்தொகை. உவம உருபுகள்  ‘மலர்ப்பாதம்’ ‘கயல்விழி’ போல்வன ____ உவமைத்தொகை  உவமை வேறு உவமேயம் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று ஒற்றுமைப்படுத்த வருவது ___உருவகம் ____________________________________________________________________________ ஆண்டு இறுதித் தேர்வு – 2021 இலக்கணம் – இயல் – 2 தொடர்ச்சி-2  உருவகத்தில் முதலில் நிற்கும் சொல் ____ இரண்டாவது நிற்கும் சொல் __ உவமேயம்,உவமை  உவமைத்தொகையில் முதலில் நிற்கும் சொல் ___ இரண்டாவது நிற்கும் சொல் ___ இரண்டிற்கும் இடையில் மறைந்து வருவது __  உவமைத்தொகையின் வேறு பெயர்கள் __ உவமை, உவமேயம்…போன்ற  புலிக் கொற்றன், மழைக்கை, துடியிடை, கிளிமொழி, கற்பக வள்ளல், மதிமுகம்", மலரடி, கமலக்கண், கனிவாய்,தேன்மொழி, மான்விழி,வாள் மீசை, கயல்விழி ___ இவற்றில் உவமைச்சொற்கள், உவமேயச் சொற்களைச் சுட்டிக் காட்டுக.  உவமை ___ வகைப்படும்.அவை ___, ___  தொகை உவமை, உவமைத்தொகையில் ___ உருபு மறைந்து வரும்.  விரிஉவமையில் ___ வெளிப்படையாக வரும்.  உவமைத்தொகை, வினை,பயன், மெய், உரு என்ற பொருளில் வரும்.  மலர்முகம்,மலர்க்கை,தாய்மொழி,கயல்விழி,அன்னைத்தமிழ், முத்துப்பல், உவமைத்தொகை - உருவகம்  மலர்முகம் - முகமலர்  மலர்க்கை - கைமலர்  தாய்மொழி - மொழித்தாய்  கயல்விழி - விழிகயல்  அன்னைத்தமிழ் - தமிழன்னை  மலர்விழி - விழிமலர் .  இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று கூறுவது  ஒரு பெண்ணின் முகத்தை பார்த்து. மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுவது ___.  தார் வேந்தன், நீர்த்தடம்,போர்க்குகன்  ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை  நிறத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புப்பெயர்கள் பசுமை,நீலம்,வெண்மை  குணத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புச் சொற்கள்: நன்மை, தீமை,கொடுமை,பொறாமை.  சுவையைக்குறிக்கும் சொற்கள்: காரம்,புளிப்பு,கசப்பு  வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்: சதுரம்,வட்டம்,நாற்கரம்  பண்புப்பெயர்கள், நிறம்,சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றை  இருபெயரொட்டுப் பண்புத்தொகை - இது பண்புத் தொகையின் ஒரு வகையாகும்.  மூவேந்தர் = மூன்று + வேந்தர், சேவடி", "செங்கண்", "நெடுங்கடல்", "மூதூர்", "தண்தயிர்", "பைந்தொடி", "வெண்சிலை", "நாற்படை"  இரு பெயரொட்டுப் பண்புத்தொகை இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும்.  இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் முதல்சொல் சிறப்பு பெயர்ச்சொல்லாக இருக்கும்.  இருபெயரொட்டுப் பன்புத்தொகையில் இரண்டாவது சொல் பொதுப் பெயர்ச்சொல்லாக இருக்கும்.  பனைமரம் என்னும் சொல்லில் பனை என்பது சிறப்புப்பெயர். மரம் என்பது பொதுப்பெயர். சிறப்புப் பெயர், பொதுப்பெயர் இரண்டுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்  செண்பகப்பூ: செண்பகம் சிறப்புப் பெயர். பூ பொதுப்பெயர்  பச்சைப் பட்டு – இருபெயரொட்டு பண்புத் தொகை  வண்ணத்துப்பூச்சி, மின்மினிப்பூச்சி.என்பன __  சாரைப்பாம்பு, தமிழ்மொழி, கோரைப்புல், தைத்திங்கள், அவியுணவு, தவத்தொழில், அரிமான், அந்திமாலை, உரைக்கல், அறவினை, மாமரம், மடித்தலம், பாரதநாடு, வேற்படை, கற்புக்கடம், மல்லிகை மலர், செருக்களம், அவைக்களம்,  பால் குடித்தான் - இரண்டாம் வேற்றுமைத் தொகை  பால் குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை  தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை  பொன் வளையல் - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை  என் மகள் - நான்காம் வேற்றுமைத் தொகை  குழந்தைப் பால் - நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை  ஊர் நீங்கினான் - ஐந்தாம் வேற்றுமைத் தொகை  வாய்ப்பாட்டு - ஐந்தாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன்தொக்க தொகை  நண்பன் வீடு - ஆறாம் வேற்றுமைத் தொகை  மலைக் கோயில் - ஏழாம் வேற்றுமை  தண்ணீர்ப் பாம்பு - ஏழாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன் தொக்க தொகை  ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்; உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை.  அன்மொழி என்பது அல் + மொழி எனப் பிரியும். அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள்.  தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது.  தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது.  அன்மொழித்தொகை என்பது, வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத் தொடர்மொழிகளுக்கு உரிய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிறசொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தும்.  பூங்குழல் வந்தாள், பொற்றொடி வந்தாள், "ஆயிழை வந்தாள், சுடுகதிர் எழுந்தான்,தேன்மொழி நகைத்தாள், இன்மொழி பேசினான் – என்பது ___  எண்ணல்,எடுத்தல், முகத்தல்,நீட்டல் எனும் அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வருவது எண்ணும்மை.  இரவு பகல்’ என்பது ‘இரவும் பகலும்’ என விரியும். இடையில் ‘உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து வருவது, உம்மைத் தொகை எனப்படும்.  கபிலபரணர்’, ‘உற்றார் உறவினர்’  நாழி ஆழாக்கு, சாண்,அரை, ஆடல்,பாடல் – எண்ணும்மையாக்குக.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்

No comments:

Post a Comment

Translate