Search This Blog

Saturday, July 14, 2012

காமராசர்



    மக்களின் உள்ளம் கவர்ந்தவரே !

மகான்களின் வழியில் நடந்தவரே !

மண்ணின் பெருமையைக் காத்தவரே !

மகா திட்டங்களைத் தீட்டியவரே !

மதிய உணவை அமல்படுத்தியவரே !

மங்காத ஜோதியாய்த் திகழ்ந்தவரே !

மாபெரும் மைந்தனாய் மிளிர்ந்தவனே !

மணம் மிக்க மலராய் மலர்ந்தவனே !
மனிதர் குல மாணிக்கமே !

மாசற்றத் திலகமே !
மதிப்பு மிக்க தேவகுமாரனே ! – என்

மனம் நிறைந்தவனே ! – நீவிர் இம்

மண்ணுலகை விட்டு மறைந்தாலும்

மறையாத புகழுடனே….. மக்களின்

மத்தியில் நின்றவரே !

மலையினும் உயர்ந்த பண்புள்ளம் கொண்டவரே !

மறையோனே…!…. மதிப்புடன் இருப்பவரே ! …………...என்றும்

என் நினைவில் வாழும் கதாநாயகனே !

கருப்பு காந்தியே ! கர்மவீரரே !
கல்விக்கண் கொடுத்தவரே ….. என்

காமாட்சியே … காமராசரே….

வாழ்க உம் புகழ் ! ஓங்குக என்றென்றும்…… !




No comments:

Post a Comment

Translate