Search This Blog

Sunday, July 15, 2012

கருப்பு காந்தி



கண்ணுக்கு இனியவரே !

காட்சிக்கு எளியவரே !

கிங்மேக்கராய்த் திகழ்ந்தவரே !

கீதையின் வழி நடந்தவரே !

குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவரே !

கூப்பிட்டக்குரலுக்குக் குரல் கொடுத்தவரே!

கெடு நினைவுகளை அகற்றியவரே !

கேள்வியறிவில் வளர்ந்தவரே !

கையளவுப் பொருள் கூட தனக்கெனச் சேர்க்காதவரே !

கொடுங்கோல் ஆட்சி நடத்தாதவரே !

கோமகனாய் நிலைத்தவரே !- மொத்தத்தில்

கௌதம புத்தராய் ஆசையை அறவே வெறுத்து உயர்ந்தவரே ! அவரே 

குமாரசாமி – சிவகாமி பெற்றெடுத்த செல்வமகன் காமாட்சியே !!

No comments:

Post a Comment

Translate