Search This Blog

Monday, July 18, 2022

ஒன்பதாம் வகுப்பு: இலக்கணம் அறிவோம்!!

 தன் வினை வாக்கியம்:


1. தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது.(அல்லது)

ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.

(எ.கா)

கரையைச் சேர்வான்

என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் செய்வான் என்பது பொருள்.


எ.கா

செல்வி பாடம் கற்றாள்.

முருகன் திருந்தினான்.


2. பிறவினை வாக்கியம்


பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.(அல்லது)

ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.

இதனை எளிதாகப் புரிந்து கொள்ள அல்லது எழுத...

 

பித்து' 'வித்து' எனும் சொற்கள் சேர்ந்து வரும்.


(எ.கா)

கரையில் சேர்ந்தான் என்பது தன்வினை


கரையில் சேர்ப்பான்(அல்லது) சேர்ப்பிப்பான் - இது பிறவினை

அதாவது, வேறு யாரையோ அல்லது எதையோ சேரும்படி இவன் செய்வான் என்பது பொருளாகும்,

எ.கா.

ஆசிரியை பாடம் கற்பித்தார்

அவன் திருத்தினான்


கூடுதல் எடுத்துக்காட்டுகள்: 


தன்வினை.      -         பிறவினை

திருந்தினான்-           திருத்தினான்

உருண்டான்-               உருட்டினான்

பயின்றான்-                 பயிற்றுவித்தான்

பெருகு-                          பெருக்குவித்தான்

செய்-                              செய்விவித்தான்

வாடு-                              வாட்டுவித்தான்

நடந்தான்-                     நடத்தினான்

சேர்கிறேன்-                  சேர்க்கிறேன்

ஆடினாள்-                    ஆட்டுவித்தாள்

பாடினான்-                   பாடுவித்தான்

கற்றார்-                         கற்பித்தார்

தேடினான்-                   தேடுவித்தான்

உண்டாள்-                    உண்பித்தாள்

அடங்குவது-               அடக்குவித்தான்

வருந்துவான்-             வருத்துவான்

அடங்கினான் -           அடக்கினான்

ஆடினான் -                   ஆட்டினான்

மாறுவான் -                  மாற்றுவான்


இதில், பித்து, வித்து என்பதை......


நட - நடப்பி - நடப்பித்தான்


செய் - செய்வி - செய்வித்தான்


என்பனபோல வரும். சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.


செய்வினை வாக்கியம்


ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.


(எ.கா) புத்தகம் படிக்கிறேன்


கொசு கடித்தது


நாயை அடிக்கிறான்


பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்.


தச்சன் நாற்காலியைச் செய்தான்


அவள் மாலையைத் தொடுத்தாள்


ராதா பொம்மையைச் செய்தாள்


இத்தொடர்களில் உள்ள வினைச் சொற்கள் செய்வினைச் சொற்களாகும்.


4. செயப்பாட்டு வினை வாக்கியம்


செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும்,

 பயனிலையோடு‘பட்டது’ ‘பெற்றது’ 

என்ற சொற்கள் சேர்ந்து வரும்.



(எ.கா) கல்லணை(செயப்படுபொருள்) கரிகாலனால்(எழுவாய்) கட்டப்பட்டது(பயனிலை)



தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..


புத்தகம் (என்னால்) படிக்கப்படுகிறது.


நான் (கொசுவால்) கடிக்கப்பட்டேன்.


நாய் (அவனால்) அடிக்கப்படுகிறது.


இத் தொடர்களில் செயப்பாட்டு வினைகள் உள்ளன. 

செய்வினையில் படிக்கிறேன் என்றிருந்த சொல், 

செயப்பாட்டு வினையில் படிக்கப்படுகிறது என மாறுகிறது. 


படு என்னும் துணைவினைச் சொல் இவை அனைத்திலும் சேர்ந்து வருகிறது.




No comments:

Post a Comment

Translate