Search This Blog

Friday, October 19, 2012

கும்மிப் பாடல்


ன்னனனானினம் தன்னானம் 
தன தான தன்னினம் தன்னானம் (2)
கும்மியடிப்பெண்ணே கும்மியடி
உடல் வளைந்து  நெளிந்துக் கும்மியடி
நாம் பயிலும் பள்ளியை வாழ்த்திப் பாடி
தலை வணங்கி நிமிர்ந்து கும்மியடி ( தன்ன)
நம் பள்ளியின் மேலாண்மைக் குழுவை
வாழ்த்தி வணங்கிக் கும்மியடி
அழகுற அமைந்த ஆசிரியர் அணியை
ஆடிப் பாடி கும்மியடி
ஆசிரியர் பணியே உயர்ந்தது என்று
உறுமிக் கொட்டிக் கும்மியடி
மாணவன் என்போன் மாண்புடையோன்அவன்
மங்கா ஜோதியாய் ஒளிர்பவன்-இத்தகைய
மாணவ மணிகளை மணியாய் உருவாக்கும்
மதிப்பு மிக்கப் பள்ளியை………………….
கும்மியடிப்பெண்ணே கும்மியடி
மணல் தெரிக்கத் தெரிக்கக் கும்மியடி….
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற
கோட்பாட்டை உணர்த்தும் பள்ளியை
அசைந்து அசைந்து கும்மியடி---- நல்ல
அழகுத் தேராய் கும்மியடி

கல்வி சிறந்த தமிழ்நாடு
கல்வித் தரத்தில் சிறந்த நம் பள்ளியை
பயின்று பணிந்து கும்மியடி---பட்டு
பதம் வைத்து வைத்துக் கும்மியடி
ஒழுக்கம் என்னும் கோட்பாட்டை
உயர் குடியாய்க் கொண்ட நம் பள்ளியை
கோலெடுத்துக் கும்மியடி
நல்ல குலவை இட்டுக் கும்மியடி
வள்ளுவன் தந்த குறளினைப் போற்றி
வாழும் நம் தமிழ்நாடு --- இவ்
வள்ளுவன் பெயரில் மன்றம் வைத்தஇப்பள்ளியை
வளை குலுங்கக் குலுங்கக் கும்மியடி
விளையாட்டுத் துறையில் மேம்பட்டும்- பல
வீர்ர்களை உருவாக்கும் இப்பள்ளியை
மேனி குலுங்கக் கும்மியடி—மனம்
குளிரக் குளிரக் கும்மியடி
கலை வளர்க்கும் பள்ளிக்கூடம் – நல்ல
கருணை நிறைந்த பள்ளிக்கூடம்
கந்தனருள் பெற்ற பள்ளிக்கூடம் – நம்
கலைமகள் வாழும் பள்ளிக்கூடம்
மெய்யப்பன் பெயரில் அமைந்த பள்ளிக்கூடம் – பற்பல
மெஞ்ஞானம் வளர்க்கும் பள்ளிக்கூடம்
மேக வண்ணக் கூந்தலாட
கோல் சுழட்டிச் சுழட்டிக் கும்மியடி(தன்ன)
   

No comments:

Post a Comment

Translate