Search This Blog

Monday, October 22, 2012

மாணவர்கள்


இவண்-------------------
              மண்ணின் மைந்தர்கள்
               மாண்புடையவர்கள்
              வருங்காலத் தூண்கள்
              நினைத்ததை முடிப்பவர்கள்
              விடா முயற்சியை மேற்கொள்பவர்கள்
              வெற்றி என்னும் சின்னத்தை ஏந்துபவர்கள்
              விருட்சத்தின் கனிகள்
              விசாலப் பார்வை கொண்டவர்கள்
              தூண்டுகோலின் சாரல்கள்
              சமுதாய நலன் கொண்டவர்கள்
              நட்பை நல்குபவர்கள்
              கிள்ளைத்தன முள்ளவர்கள்
              கேள்வியின் கீதங்கள்
              கல்வியின் கலங்கரை விளக்கங்கள்
              குருவைப் போற்றும் குருமணிகள்
              பள்ளியின் விடி வெள்ளிகள்
              பற்பல பயிலும் பட்டாம்பூச்சிகள்
              நண்டு பிடி கொண்டவர்கள்
              நனி நாகரிகர்கள்
              அறிவு புலம் மிக்கவர்கள்
              ஆன்றோரின் வழி நடப்பவர்கள்
              அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்
              பகுத்தறியும் பகலவர்கள்
              கலை பல கற்பவர்கள்
              பள்ளியின் பரமபதங்கள்
              உலக மகான் வழி நடப்பவர்கள்
              உத்வேக சிந்தனையுடையவர்கள்
              சீருடையின் நாயகர்கள்
              சீர்திருத்தக் கருத்துக்களை முன்மொழிபவர்கள்
              வகுப்பறையின் வண்ண விளக்குகள்
              வள்ளுவன் வழி நடப்பவர்கள்
              துயர் துடைக்கும் தூமணிகள்
              துள்ளியெழும் புள்ளி மான்கள்
              பாசத்தின் பசப்பல்கள்
              பெரியோரைப் போற்றும் பொன்மணிகள்
              பெருமையின் சிகரங்கள்
              பேரறிவாளர்கள்   
              புத்துணர்ச்சிப் புதல்வர்கள்
              பூமகளின் பூக்கள்
              ஒழுக்கத்தை ஓம்புபவர்கள்
              ஓம்காரனின் தமிழை ஓதுபவர்கள்
               நாட்டின் நவரசங்கள்
            ------- அவன்
              அப்துல்கலாம் கனவுக்கோட்டையின் 
                            அணையா தீபமாகிய என் மாணவச்செல்வங்கள்---------
      

No comments:

Post a Comment

Translate