Search This Blog

Thursday, October 18, 2012

பொங்கல்


பொங்கலும் வந்தது ;
புது வழியும் பிறந்தது
தைத்திங்களும் வந்தது;
தரணியெல்லாம் செழித்தது
பழையன கழிந்தது;
புதியன பிறந்தது
மஞ்சளும் வந்தது;
மனமகிழ்வைத் தந்தது
உழவனின் வியர்வைக்கு
உயர்வு வந்து சேர்ந்தது
கதிரவனின் கருணைக்கு
கன்னல்களும் கனிந்தது
முழுமதி நிலவோடு
முக்கனியும் முதிர்ந்தது
இனியப் பல கன்னல்களும்
இல்லத்தில் இணைந்தது
புத்தம் புது வரவுகளும்
புதுப்பானையில் பொழிந்தது
அழகுடைய பெண்களும்
ஆடிப் பாட வந்தது.
வாசலிலே கோலமிட ;
வண்ண விளக்காய் வந்தது
மாவிலைத்தோரணம் கட்ட
மகிழம் பூவாய் மலர்ந்தது
கதிரொளி  கண்ணனுக்கு
நன்றி சொல்லி நவின்றது
திருக்குறளைத் தந்த வள்ளுவனுக்கு
திருக்கோலம்  காண வந்தது
உற்றார் உறவினர் களிப்படைய
உருவொளியாப் பிறந்தது
சிறார்கள் சிறப்படைய ;
சிறப்புடனேப் பிறந்தது
சகோதர சகோதரிகளுக்கு ;
சீர் கொடுக்கப் பிறந்தது
உழைத்த கால் நடைகளுக்குப்
பூசை செய்யப் பூத்தது
புள்ளினங்கள் சப்தமிட
; புரட்சியுடன் பிறந்தது
புத்தாடை தரிக்க;
புதுப்பென்ணாய்ப் பிறந்தது
பொங்கலோ பொங்கல் என்று குரலெழுப்ப
பொங்கி எழுந்து வந்தது
போகி, தை, மாட்டு, காணு பொங்கலெனப்
பல்வித பரிமாணத்தில் பிறந்தது
புத்துணர்வைத் தந்தது;
புதுவாழ்வும் தந்தது
எங்கள் வீட்டில் சேர்ந்தது;
என்றும் வாசம் சேர்த்தது.



No comments:

Post a Comment

Translate