ஆள்வினையுடைமை
•அருமை உடைத்தென்று
அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
பெருமை முயற்சி தரும்.
விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி
அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக
அமையும்.
•தாளாண்மை என்னும்
தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
விளக்கம்:
முயற்சி எனப்படும் உயர்ந்த
குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
•முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
இன்மை புகுத்தி விடும்.
விளக்கம்:
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்;
முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
•பொறியின்மை யார்க்கும்
பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
ஆள்வினை இன்மை பழி.
விளக்கம்:
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது
குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
நன்றி இல் செல்வம்
•கொடுப்பதூஉம்,
துய்ப்பதூஉம்
இல்லார்க்(கு),
அடுக்கிய
கோடிஉண்
டாயினும்
இல்.
• விளக்கம்:
•கோடி கோடியாக இருந்தாலும்,
•கொடாதான் நுகராதான், ஏழைதான்.
•நச்சப்
படாதவன் செல்வம்,
நடுஊருள்
நச்சு
மரம்பழுத்(து)
அற்று.
• விளக்கம்:
•கருமியின் விரும்பப்படாச் செல்வம்,
•நடுஊரில் பழுத்த நஞ்சுமரம்.
•ஊழையும் உப்பக்கம் காண்பர்
உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
விளக்கம்:
ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று
என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச்
செய்வார்கள்.
No comments:
Post a Comment