Search This Blog

Monday, November 15, 2010

எங்கள் நேரு மாமா

        






நேரு எங்கள் நேரு
நெஞ்சில் நிறை நேரு





ஊரும் உலகம் போற்றும்
ஒப்பில்லா நேரு


குழந்தைகள் மனதிலே
குதூகலித்த நேரு



கொஞ்சும் மழலைகளின் உள்ளத்தில்
கோபுரமாய் வாழ்ந்த நேரு


அழகிய மலர்ந்த ரோஜாவைத்
தன் சட்டையிலே அணிந்த நேரு



அன்பு பரிவு இரக்கமதை
அனைவரிடமும் காட்டிய நேரு



புத்தரின் கொள்கையைப்
பின்பற்றி வாழ்ந்த நேரு



மகான்களின் மனதிலும்
மனித நேயமாய் வாழ்ந்த நேரு



கள்ளம் கபடமற்ற
கருணை உள்ளம் கொண்ட நேரு



விடுதலைக்காகப் பாடுபட்ட
வீரராஜா நேரு



சிறையிலிருந்த போதும்
சிந்தனைச் சிற்பியாய் நின்ற நேரு



படிக்கும் பழக்கத்தைப்
பாலகரிடமும் பரப்பிய நேரு


பாசமுள்ள நெஞ்சினில்
பாரியாய் வாழ்ந்த நேரு



கவிஞர்களின் நெஞ்சினில்
காவியமாய் வாழ்ந்த நேரு



அக்காவியத்தின் பிறந்த நாள்
நவம்பர் 14 - அதுவே

நேருவின் நெஞ்சில் நிறைந்த
நிகரில்லா குழந்தைகள் தினம்







4 comments:

  1. A small mistake in second line i hope...
    :)

    ReplyDelete
  2. no it's not a mistake . it's a poetrical phrase, so 'nirai' means 'niraintha'

    ReplyDelete
  3. very good entertainment , my kid likes u a lot .... I was about to meet u during open day unfortunately , I dint find time , hats of to u mam.... doing wonderful job... very encouraging... till last year Inaya's tough sub is Tamil but now a good remarkable change , I want to thank u for making her understand easily...

    keep going on.......

    ReplyDelete

Translate