Search This Blog

Tuesday, November 16, 2010

**அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் பொன் மொழிகள்**



  • நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள் .   
  • எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.   
  • சில நேரங்களில் சில கஷ்டங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.   
  • நீங்கள் சொன்னதே சரி என்று வாதிடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.   
  • மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.   
  • அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.   
  • எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.   
  • கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் உடனே நம்பி விடாதீர்கள்.   
  • உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.   
  • மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.   
  • மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.   
  • புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.   
  • பேச்சிலும், நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.   
  • பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.

No comments:

Post a Comment

Translate