Search This Blog

Monday, November 23, 2015

புறப்பொருள் – பயிற்சித் தாள் – 2(2015-16) பத்தாம் வகுப்பு.



புறப்பொருள் – பயிற்சித் தாள் – 2(2015-16)
இரண்டாம் தொகுநிலைத்தேர்வு – (SA-2)
1.      புறம் பற்றிய  நெறிகளைக் கூறுவது ___
2.      புறத்திணை மொத்தம் ___
3.      உலகியல் நிகழ்வுகளைக் கூறும் திணை ___
4.      வெட்சியின் புறத்திணை ____
5.      ஆநிரைகளைக் கவர்ந்து வருபவர்கள் _____ பூவைச் சூடிச் செல்வர்.
6.      ஆநிரைகளைக் கவர்ந்து சென்றவர்கள் ____ திணை வீரர்கள்.
7.      வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை _____ பூவைச் சூடி _____ வீரர்கள் மீட்பது வழக்கம்.
8.      காஞ்சிப்பூ சூடும் வீரர்களின் புறத்திணை _____
9.      நிரை கவர்தல் என்பது _______ ஐ குறிக்கும்.
10.  கவர்தல், மீட்டல் – பொருள்
11.  மண்ணாசை கொண்டு பகை நாட்டரசனோடு போருக்குச் செல்லும் திணை______
12.  பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடும் திணை ___
13.  மதிலைக் காத்தல் வேண்டி ______ பூவைச் சூடி போர் வீரர்கள் போருக்குச் செல்வார்கள்.
14.  பகை வேந்தர் இருவருமே வெற்றி ஒன்றனையேக் குறிக்கோளாய்க் கொண்டு போரிடும் திணை ______ அவர்கள் அச்சமயம் ______ பூவைச் சூடிச் செல்வார்கள்.
15.  வட்கார்மேற்செல்வது  என்பது_____ பொருள்.இது ______ திணைக்குரியன.
16.  காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடும் மன்னன் ____ திணைக்குரியவன்.அவன் _________ அரசனோடு போரிடுவான்.
17.  மதிலுக்கு உள்ளிருந்து வெளியே இருக்கும் மன்னனோடு போரிடும் திணை ______
18.  உட்காது எதிரூன்றல் என்பது _______ பொருள்..இது _______ திணை.
19.  எயில் காத்தல் என்பதன் பொருள் ______ ..இது _____ திணைக்குரியன. இவ்வீரர்கள் ______ பூவைச்சூடி போருக்குச் செல்வார்கள்.
20.  உழிஞையின் புறத்திணை ______இவர்கள் _____ பூவைச்சூடி போருக்குச் செல்வார்கள்.
21.  எதிரியின் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைப்பது ____ திணை.இவர்கள் _____ பூவைச்சூடி போருக்குச் செல்வார்கள்.
22.  அது வளைத்தல் என்பது ____ திணை.
23.  அதிரப் பொருவது என்பதன் பொருள் ______அதிரப் பொருவதுவின் புறத்திணை ______
24.  வெற்றி பெற்ற மன்னன் வாகைப் பூ சூடிப் போருக்குச் செல்வது _____
25.  செருவென்றது என்பதன் பொருள் ______ இது _____ திணை.
26.  பாடாண் திணை = பிரித்து எழுது
27.  பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி,செல்வம்,வீரம் முதலியவற்றைப் போற்றிப் பாடும் திணை____
28.  12 புறத்திணைகளுள் முதல் ஒன்பதில் உள்ள பொதுவான செய்திகள் மற்றும் கூறப்படாதச் செய்திகளையும் பற்றிக் கூறுவது ____ திணை.
29.  கைக்கிளை என்பதன் பொருள் ______ இது ______ வகைப்படும்.அவை ________ மற்றும் _______.
30.  பெருந்திணை என்பதன் பொருள் ____இது ____ வகைப்படும்.அவை _____ மற்றும் _______.
31.  மதில்போர் பற்றிய புறத்திணைகள் மொத்தம் _____ அவை _____ மற்றும் _____.
32.  வாகைத் திணை என்பது போர்கலத்து மிக்கார் _____ ஆகும்.
33.  பொருந்தாக் காமம் என்பது ______
34.  நிரைகளைப் பற்றி கூறும் திணைகள் _______   ________

35.  வெட்சி ______ வஞ்சி ______ நொச்சி ______ தும்பை _____.

No comments:

Post a Comment

Translate