Search This Blog

Thursday, January 6, 2011

மார்கழி 22- பாடல்+பொருள்

கண்ணை விழித்து, செந்தாமலர்க் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கமிருப்பார் போல்வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய்.

விளக்கம்:
                           "பரந்த பூமியை ஆண்ட மன்னர்கள், தமக்கு மேம்பட்டவர்கள் யாரும் இல்லை என்னும் கர்வம் அடக்கப்பட்டு, இங்கு வந்து உன் அரியாசனத்தின் கீழ் சங்கமிருப்பது போல நாங்களும் இங்கு வந்தடைந்தோம். எனவே, கிண்கிணி சதங்கைப்போலே, பாதி மலர்ந்த செந்தாமலரைப் போன்று உன் சிவந்த கண்கள் எங்கள் மேல் விழிக்கலாகாதோ? சந்திர, சூர்யர்களைப்போன்ற அவ்விழிகள் எங்கள் மேல் விழுமாகில் எங்களின் அனைத்து பாபங்களும் கழிந்து விடும்."

No comments:

Post a Comment

Translate