உனக்கே மங்களம் உண்டாகுக!
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்று அங்குத்தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச்சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலாய் எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இறங்கு ஏலோர் எம்பாவாய்!
விளக்கம்:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxk0hAeIiclFsUTSAkza8bxdyMdJlstfEcRTx7YIwcv9A_Y0qFvDPUEMGo7nyxISk1WcLAzu1CrOllFy7t-r1eL1rQv_JY9cfFaHemHZGonI0nj0rCH2vNfNP9aeB2WHn9e9XEocmUT64W/s200/242.jpg)
"இந்திரனை மஹாபலி துன்புற்றிய காலத்தில், இவ்வுலகங்களை இரண்டடியால் அளந்தவனே! உன் திருவடிகளுக்கு மங்களம். சீதையைத் தேடிப் போய் தென் இலங்கையை அழித்தாய்! உன் திருத்தோள் வலிமைக்கு மகிமையுண்டாகுக. வண்டி உருவில் வந்த சகடாசிரனை உதைத்து வெற்றி கொண்டவனே, உன் புகழ் ஓங்கட்டும். கன்று வடிவாக வ்ந்த அரக்கனை, எரிகருவியாகக் கொண்டு விளாமர வடிவாக வந்த அரக்கனையும் கொன்றவனே! உன் திருவடிகளுக்கு மங்களம். கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து கோவலர்களைக் காத்தவனே! உனக்கு மங்களம். பகைவரை அழிக்கும் உன் வேலுக்கு மங்களம். எப்பொழுதும் உன் வீர செயல்களைக் கூறி, எங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் இங்கு வந்தோம். எங்களுக்கு கருணை புரிவாயாக!"
No comments:
Post a Comment