Search This Blog

Friday, January 14, 2011

மார்கழி 30 பாடல் + விளக்கம்

இந்த முப்பது பாடல்களையும் பாடுவோர் அடையும் பேரின்பம்

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்ட வாற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று என்புறுவரெம்பாவாய்


விளக்கம்:
" திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தம் தந்தருளிய கண்ணபிரானை, கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனை, பூர்ண சந்திரன் போன்ற முகத்தையுடைவனை, ஆபரணங்களை அணிந்த ஆயர்பாடி மகளிரை பறை என்ற பெயரில் அடிமையாக்கிக் கொண்ட கண்ணனின் வரலாற்றை, ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த புதிய தாமரை மலர்களாலான மாலையை உடுத்திய அந்தணருமான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளால் அருளிச் செய்த தமிழ் பாமாலை முப்பது பாடல்களையும் தவறாமல் ஆர்வத்துடன் உள்ளத்தூய்மையுடன் பாடுபவர்கள், மாலையணிந்த நான்கு திருத்தோள்களையும், சிவந்த கண்களையும், அழகிய முகத்தையும் எல்லா செல்வங்களையும் உடைய திருமகளை நாதனாய் பெற்ற ஸ்ரீமன் நாராயணின் திருவருள் பெற்று, எப்பொழுதும், எவ்வித குறையுமின்றி பேரின்பத்துடன் வாழ்வார்கள்."

இத்துடன் திருப்பாவை முற்றிற்று.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment

Translate