Search This Blog

Wednesday, January 12, 2011

மார்கழி 28- பொருள்+பாடல்


சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களை கோபிக்காது, எங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வாயாக!



கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

பொருள்:
                "பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவும் படைத்த நாங்கள், ஆயர்குலத்தினில் பிறந்த உன்னை எங்கள் குலத்தவனாக பெற்றடைய பெரும் புண்ணியத்தை செய்துள்ளோம். யாதொரு குறைவும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக்கொண்ட கண்ணனே! உன்னுடன் எங்களுக்கு ஏற்ப்பட்ட உறவை, யாராலும் அழிக்க முடியாதது. அற்ப அறிவைப் பெற்ற சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மதவன் போன்ற) சிறிய பெயர்களினால் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களைத் தந்து அருள வேண்டும்."

No comments:

Post a Comment

Translate