Search This Blog

Saturday, January 8, 2011

மார்கழி 23- பாடல்+பொருள்

எங்கள் குறைகளை கேட்டு, அருள் புரிவாயாக


மாரிமலை முழிஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீறரியசிங்க்ச்ம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப்புறப்பட்டுப்
போத்ருமா போலே நீ, பூவைப் பூ வண்ணா!உன்
கோயில் நின்ற் இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம்
ஆராய்ந்து அருள் ஏலோரெம்பாவாய்.

விளக்கம்:
"மழைக் காலத்தில், பெண் சிங்கத்துடன் உறங்கிகொண்டிருக்கும் ஆண் சிங்கம், தூக்கம் தெளிந்து எழுந்துவந்து, தீக்கதிர்கள் பறக்கும் தன் கண்களை விழித்து, பிடரி மயிர் நாற் பக்கமும் படரும்படி எழுந்து உடம்பை அசைத்து, கம்பீரமாக பேரொலி எழுப்பி குகையிலிருந்து புறப்படுவது போல, நீயும் உன் கோவிலிலிருந்து கிளம்பி, இம்மண்டபத்திற்க்கு எழுந்தருளி, வேலைப்பாடுகள் மிகுந்த அரியணையில் அமர்ந்து, நாங்கள் வந்த காரியங்களை கேட்டறிந்து அருள் செய்வாயாக!"

No comments:

Post a Comment

Translate