Search This Blog

Monday, January 10, 2011

மார்கழி 26- பாடல்+பொருள்

மார்கழி நீராட தேவையான பொருள்களை அளிப்பாயாக!

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல் வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

பொருள்:
"பக்தர்களை உன்மீது மயக்கங்கொள்ளச்செய்தவனே! நீல மணி போன்ற நிறத்தையுடையவனும், யாதவ குலவிளக்கு போன்றவனும், ஆலின் இலையில் துயில்பவனுமான கண்ணனே! நாங்கள் மேற்கொள்ளயிருக்கும் நோன்புக்கு தேவையான பால் போன்ற நிறமுடைய, உன் இடக்கையில் உள்ள பஞ்சசன்னியத்தை ஒத்த சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்ககளையும், பல்லாண்டு பாடுபவர்களையும், தீபங்களையும், கொடிகளையும் நீ எங்களுக்கு அருள் புரிந்து அளிப்பாயாக!"

No comments:

Post a Comment

Translate