Search This Blog

Tuesday, January 11, 2011

மார்கழி 27- பாடல்+பொருள்

நோன்பு செய்ய அருளிய பொருள்களைப் பெற்றவுடன் உன்னிடமிருந்து பெறவேண்டியது என்ன?

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள்வளையே, தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே, பாற்சோறு
மூடநெய் பெய்து, முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:
              "பகைவர்களை வெல்லும் கோவிந்தா! உன் புகழைப் பாடி பறையைப் பெற்று, பின் நாங்கள் இன்னும் உன்னிடத்து பெறவிரும்பும் பரிசுகள் யாவையெனில், அனைவரும் புகழத்தக்க முன் கையில் அணியும் வளைகளும், தோளுக்கு இடும் ஆபரணங்களும், தோடும், காதணிகளும், காலில் அணியும் ஆபரணங்களும், புதிய ஆடைகளும் ஆவன. இவைகளப் பெற்று புத்தாடைகளையணிந்து பால் சோறு மூடும்படி நெய் பரிமாறி, அவற்றை முழங்கையிலிருந்து வழியும்படி உண்டு, உன்னுடன் நாங்கள் கூடி, இன்புற்றிருந்து, குளிர வேண்டும். இவ்வாறாக எமது நோன்பு முடிவடைதல் வேண்டும்."

No comments:

Post a Comment

Translate