Search This Blog

Saturday, January 29, 2011

6. இசை ஞானியார் நாயனார்


            சிவனடியார்கள் அறுபத்து மூவரில் சுந்தர நாயனார் தலை சிறந்தவராவார். அவரது பிறப்பே அலாதியானது.

           சிவனடியார்களில் ஒருவரான ஆலாசுந்தரம் என்பவருக்குச் சிவபெருமான் கொடுத்த சாபத்தால் இசைஞானியார் புனிதவதியின் கர்ப்பத்தில் கருவாக ஜனித்தார். இசை ஞானியார் சடையனார் என்ற நாயனாரின் துணைவியாராவர்.

           இசை ஞானியார் மிகச்சிறந்த சிவபக்தையாக விளங்கியவர். சிவனடியார்களை மிகவும் மதித்து போற்றி நடப்பவர்.

           சிவபெருமான் மீது இவர் கொண்ட பற்று காரணமாகவே சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரை ஈன்றெடுக்கும் புனிதப் பணியினை இவருக்கு அளித்தார்.

           சுந்தரமூர்த்தி நாயனாரின் புகழ்ப்போலவே அவரைப் பெற்றெடுத்த இசை ஞானியாரின் புகழும் ஞாலம் உள்ளவும் நிலைத்து நிற்கிறது.

No comments:

Post a Comment

Translate