Search This Blog

Friday, January 21, 2011

1. அதிபத்த நாயனார்



அதிபத்தர், சோழ நாட்டில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினம் துறைமுகத்தில் வாழ்ந்து வந்தவர். மீனவச் சமூகத்தை சேர்ந்தவர். எனவே தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கச் செல்லுவார். நடுக்கடலில் கிடைக்கும் முதல் மீனை “இது ஈசனுக்கு” என்று சொல்லி மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்.

மீன்களே கிடைத்திடாத காலங்களிலும், மிக அரிதாக கிடைக்கும் மீனையையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பட்டினியாக கிடப்பார். தலையே போயினும் தலை மீனை இறைவனுக்கு அளிக்கும் செயலை விடவே இல்லை.

ஒரு முறை மிகுந்த பஞ்சம் வந்தது. உறவுகள், நண்பர்கள் என எவருக்கும் மீன் கிடைக்கவில்லை. எல்லோரும் வருந்தினர். அந்தச் சூழ்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார் அதிபத்தர். கொண்ட கொள்கையை தவறவிடவில்லை. தினமும் ஒரு மீன் கிடைக்கும், அதை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி நாட்கள் சென்றாலும், தன்னுடைய பணியையும், பக்தியையும் அவர் விடவே இல்லை.

தினம் நிகழும் செயலைக் கண்ட சிவபெருமான், அன்று மீனுக்கு பதிலாக வைரம் போன்ற விலையுயர்ந்த நவரத்தின மணிகள் பதித்த தங்க மீனை அதிபத்தருக்கு கிடைக்கச் செய்தார். அந்த மீனைக் கொண்டு உறவுகள், நண்பர்கள் என அனைவருக்கும் அதிபத்தர் உணவிடமுடியும். ஆனால் அதிபத்தர் தனக்கு கிடைத்த முதல் மீன் என்றே எண்ணினார். சிறிதும் தயங்காது அந்த பொன் மீனை கடலில் விட்டார்.

அடுத்தகனம் ஈசன் வானில் தோன்றி “பக்தா, கொண்ட கொள்கையில் எந்நாளும் நின்று என்னை மகிழ்வித்தாய். இனி என்னோடு இருக்கும் சிவனடியார்களோடு வந்து இணைவாயாக “, என்று சொல்லி மறைந்து போனார்.



1 comment:

  1. அறுமூன்று நாயன்மார்களின் வரலாற்றை மிக அரிய புகைப்படத்துடன் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி.
    .......... ஞானபழனி, குறிஞ்சிப்பாடி.......

    ReplyDelete

Translate